Monday, September 03, 2007

கனவுகள்

திருமதி வல்லி சிம்ஹன்,என்னுடைய கனவுகளை போடச்சொல்லி கேட்டிருந்தாங்க.அப்புறம் தான் தோனிற்று எனக்கு ஏதாவது கனவு இருக்கா? என்று.

இனிமேல் தான் யோசிக்கனும்.

என்னுடைய கனவுகள் எதுவே பெரிதானதாக இல்லை.நான் கிடைப்பதை வைத்து சந்தோஷப்படுவதால் பெரிதாக ஆசைப்படுவதுமில்லை.சின்ன வயதில் நல்ல ஆடை உடுத்த வேண்டும் பேண்டு போட வேண்டும் என்று ஆனால் அப்படி ஏதும் உடனடியாக நிகழாமல் போனதால் நாளடைவில் இருப்பதை கொண்டு வாழ கற்றுக்கொண்டேன்.

எனது கனவுகள் தூங்கும் போது வருவதில்லை,முழித்துகொண்டு இருக்கும் போதே இருக்கும்.

அவற்றில் சில.

முதலாவதாக கணினி மென்பொருள் பற்றி படித்து ஒரு பட்டப்படிப்பு வாங்க வேண்டும் என்பது.(தேவையா/முடியுமா என்பது பற்றிய கேள்விகள் இருக்கிறது)

இரண்டாவதாக கார் வாங்கவேண்டும். (அடையக்கூடியது தான் - ஊருக்கு போன பிறகு)

தொழில் செய்ய வேண்டும்- நேர்மையாக, எளியவர்களுக்கு குறைந்த விலையில் வீடு கட்டி தர வேண்டும்.(மா.சிவகுமாரின் வேண்டுகோள் இது)

80 வயது வரை உடல் நலத்துடன் இருக்கவேண்டும்.ஏனென்றால் அது வரை தான் வாழ்கைக்கு தேவையான பொருளாதாரத்தை சேர்க்க நினைத்துள்ளேன்.

நல்ல தகப்பன் - என்று என் மகன் சொல்ல வேண்டும்.

இவையெல்லாம் தான் தற்போது ஞாபகத்துக்கு வந்தது.

நான் அழைக்க விரும்பும் சிலர்

முடிந்த போது போடுங்கள், நண்பர்களே.

1.வவ்வால்

2.தென்றல்

3.கோவி.கண்ணன்

4.CVR

5.நா.கண்ணன்.

8 comments:

வல்லிசிம்ஹன் said...

எனது கனவுகள் தூங்கும் போது வருவதில்லை,முழித்துகொண்டு இருக்கும் போதே இருக்கும்.

அவற்றில் சில.

முதலாவதாக கணினி மென்பொருள் பற்றி படித்து ஒரு பட்டப்படிப்பு வாங்க வேண்டும் என்பது.(தேவையா/முடியுமா என்பது பற்றிய கேள்விகள் இருக்கிறது)



தொழில் செய்ய வேண்டும்- நேர்மையாக, எளியவர்களுக்கு குறைந்த விலையில் வீடு கட்டி தர வேண்டும்.(மா.சிவகுமாரின் வேண்டுகோள் இது)

80 வயது வரை உடல் நலத்துடன் இருக்கவேண்டும்.ஏனென்றால் அது வரை தான் வாழ்கைக்கு தேவையான பொருளாதாரத்தை //
Good honest dreams shall never go waste Kumar.

AruL vaLam, poruL vaLam elaam unggaLukkuk kidaikka vaazththukkaL.

வடுவூர் குமார் said...

திருமதி வல்லி சிம்ஹன்,வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

கோவி.கண்ணன் said...

குமார்,

உங்கள் கனவுகள் எல்லாம் எல்லைக்குட்பட்ட, அடைய முடியதொலைவில் தான் இருக்கிறது.

எனவே எல்லாம் நிறைவேற வாழ்த்துக்கள் !

என்னையும் அழைத்ததற்கு மிக்க நன்றி !

வடுவூர் குமார் said...

மிக்க நன்றி கோவியாரே.

வெங்கட்ராமன் said...

நல்ல கனவுகள்.
விரைவில் நிறைவேற வாழ்த்துக்கள்.

வடுவூர் குமார் said...

வாங்க வெங்கட்ராமன்.
மிக்க நன்றி

நாகை சிவா said...

அனைத்து நினைவாக வாழ்த்துக்கள் என்று எல்லாம் கூற போவது இல்லை.. எல்லாமே நிறைவேற கூடிய கனவுகள்...

விரைவில் நிறைவேற வாழ்த்துகிறேன்.

வடுவூர் குமார் said...

வாங்க சிவா,
முடிச்சிடுவோம்,கடைசியாக சொன்னது 50% வீதம் தான் என் கையில்.