Wednesday, May 24, 2006

Tamil FM

FM ரேடியோ

சிங்கப்பூரில் நிறைய FM stations உள்ளது அதுவும் தமிழுக்கு என்று ஒலி-96.8 மட்டும் தான்.நிறைய Buildings உள்ளதால் நல்ல Receptionக்கு வீட்டின் உள்ளேயே கபடி ஆடவேண்டும்.நீங்கள் ரேடியோ இருக்கும் பக்கம் போனால் ஒலி அளவு குறையும் / கூடும்.
இது எனக்கு மட்டும் உள்ள பிரச்சனையா அல்லது வீட்டில் எல்லோருக்கும் உள்ளதா என்று தெரியவில்லை.அதென்னவோ அதற்கு மிக பக்கத்தில் உள்ள Station மிக சுத்தமாகக்கேட்கிறது.அப்போது பக்கதில் இருக்கும் Buildings என்னாகிறது என்று தெரியவில்லை.

வெளியில் போனால் மேல் சொன்னதை தவிர Malaysiaவின்
101.1 & THR Ragga ம் கேட்கமுடியும்.இதில் THRஐ பற்றி பார்ப்போம்.

THR-FM ரேடியோ...இதன் நிகழ்ச்சிகள் காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகும்.நிகழ்ச்சிகள் பல சும்மா அட்டகாசமாக இருக்கும்.அதுவும் Geetha படைக்கும் நிகழ்ச்சி என்றாலே ஒரு கல கலப்புதான்.

நேற்று பிற்பகல் சுமார் 3 மணி அளவில் Malaysiaவில் இருந்து ஒலிபரப்பாகும் THR-FM ரேடியோவை கேட்கநேர்ந்தது.நடந்தது இது தான்,

ஒரு பெண் குரல் ஒரு ஆணை Phoneயில் கூப்பிட்டு

அத்தான் (கொஞ்சும் குரலில்) நான் Bus இல் ஏறி வந்தேனா,இங்கு இறக்கிவிட்டுட்டு போயிவிட்டார்கள்,எனக்கு இடம் தெரியவில்லை,வந்து அழைத்துக்கொண்டு போகிறீகளா? இங்கு யாருமே இல்லை.

அவர்: ஆமாம்மா,பக்கத்தில் ஏதாவது Buildings உள்ளதா?

ஒன்றும் இல்லை

அவர்:Bus stopயில் பெயர் எழுதியுள்ளதா?

இல்லிங்களே!!!

அவர்:பக்கத்தில் நிறைய காடி(கார்கள்) போகிறதா? (Highway க்கு பக்கத்திலா என்று கண்டுபிடிக்கிறார் போலும்)

ஆமாம்

அவர்:நீ எந்த பஸ்ஸில் ஏறினாய்?

(இவர் ஒவ்வொன்றாக இந்தமாதிரி கேட்டுக்கொண்டே போக அந்த பெண் எரிச்சலில்)

என்னங்க நான் இங்கு தனியாக கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கேன் நீங்க கேள்வி மேல் கேள்வி கேக்றீங்களே என்று பதட்டப்பட

அவர்:ஏம்மா நீ எங்கு இருக்கிற என்று தெரிந்தால் தானே நான் கூட்டிவர முடியும்.(ஐயா செம Cool,கொஞ்சம் கூட பதட்டப்படவில்லை)

நான் ஒரு திசையில் போய் நீ வேறு திசையில் இருந்தால் என்ன பண்ணுவது?

பெண்:கொஞ்சம் இருங்க,ஒருவர் வருகிறார் அவரிடம் பேசுங்கள் என்று அடுத்தவரிடம் Phone போகிறது.

3வது நபர்:ஹலோ

ஹலோ,நீங்க யார் பேசுவது?

இதற்கு மேலும் அவரை வெறுப்பேற்ற வேண்டாம் என்று Miss Geetha (DJ) உண்மையை உடைக்கிறார்.

அந்த ஆண் கொஞ்சும் குரலில்

என்ன கீதா இப்படி பண்ணீட்டிங்க,நான் பயந்துட்டேன் என்றார்.

இந்த phone conversationயில் அந்த பெண்ணின் குரல், நிஜமாகவே பேசுவது போல அட்டகாசமாக இருந்தது.

இத்தனைக்கும் இவர்கள் இருவரும் கல்யாணம் ஆகாதவர்கள்,அந்த ஆணின் அக்கா கல்யாணம் முடிவதற்காக காத்திருக்கும் வருங்கால தம்பதிகள்.

பொறுமை இருந்தால் போதும்-நிச்சயமாக ஜெயிக்கலாம்.

உங்கள் இருவருக்கு எனது உளம் கனிந்த வாழ்த்துக்கள்.

No comments: