Wednesday, May 24, 2006

முதல் வேலை-First Job

எது எப்படியோ...நடப்பது நல்லவற்றிற்கே என்று நினைத்து துவங்குவோம்.

முதலில் எனக்கு பாடம் சொல்லிக்கொடுத்த அனைத்து ஆசிரியர்களுக்கு வணக்கம்.

வாருங்கள் வேலைதேடும் படலத்துக்குள் நுழைவோம்..

நான் முதலில் பார்த்த வேலை "Port Trust" இல் Technical Assistant.

எவ்வளவு நாள் பார்த்தேன் தெரியுமா?

ஒரே ஒரு நாள்.என்ன அப்படி பார்க்கிறீர்கள்?

தெரிந்தவர்கள் மூலமாக சேர்த்துக்கொண்டு அன்று சாயங்காலமே "Assistant Engineer"-Permission இல்லாமல் இப்படி வேலைக்கு வைக்கக்கூடாது என்று சொல்லி நிறுத்திவிட்டார்கள்.நல்ல வேலை இவ்வளவு சீக்கிரம் புரிந்துகொண்டு அனுப்பிவிட்டார்கள்.ஆண்டவன் அருளாள் பிழைத்தேன்.

சில மாதங்கள் ஊரை சுற்றிவிட்டு இங்கு சரிப்பட்டு வராது என்று Chennai கிளம்பி வந்தேன்.

மாமாவீட்டில் (நங்கநல்லூர்) தங்கி முதலில் "Employment Exchange" இல் பதிவு செய்துகொண்டேன்.2 மாதங்கள் கழித்து சில நேர்கானல்கள் வந்தது.அதில் Tiruvallurயில் வந்த நேர்கானலில் தகுதிபெற்று அந்த பிரபலமான-மக்களுக்காக சேவை செய்யும் நிறுவனத்தில் சேர்ந்தேன்.
மக்களுக்காக சேவை செய்துகொண்டு மக்கள் பணத்தை சாப்பிடுவதாக ஊழல் நிறைந்ததாக சொல்லப்படும் மிக பிரபலமான நிறுவனம் தான்.இப்படி தகுதி பெருவதற்கும் Echangeயில் இருந்து letter பெறுவதற்கும் சில குறுக்கு வழிகளை போக நேரிட்டது.தலைகுனிந்து வெட்கப்படவேண்டும்.வேறு வழியில்லை.எப்போது தகுதிக்கு %age போட ஆரம்பித்தோமோ அன்றிலிருந்தே நிறைய Compromise செய்யவேண்டியுள்ளது.வயிறு,பசி மற்றும் வேலை தேடவேண்டும் என்ற வெறி.

இது யாரையும் குறைசொல்வதற்காக அல்ல.ஒரு சமுதாயத்தில் ஒரு மனிதனின் நிகழ்வுகள்.அவ்வளவு தான்.

இந்த நிறுவனத்தில் சேர்ந்து நான் கற்றுக்கொண்டது மிக மிகக்குறைவு bill book எழுதுவது,புது வேலைகளுக்கு வேண்டிய Papersஐ பல Departmentயில் இருந்து வாங்கிக்கொண்டுவருவது,ஏதாவது Drawings போடுவது என்று ஒடிக்கொண்டு இருந்தது.Mr Subramani என்ற கீழ்நிலை பொறியாளர் தனக்கு தெரிந்த விஷயங்களை சொல்லிக்கொடுத்தார்.Soft hearted Person-இந்த குணநலங்களுடன் இவர் எப்படி இங்கு வேலைப் பார்கிறார் என்று ஆச்சரியமாக பார்த்திருக்கேன்.அந்த Project முடிந்தது.

அடுத்த Project --Tambarத்தில்.இன்னும் அதே நிறுவனம் தான்.இங்கு நான் பார்த்த கட்டிடங்கள்-- பொதுக் கார்கள் வந்து போகும் இடம் மற்றும் ஒரு Shopping Complexம்.
எங்கள் Office ஒரு கீத்துக்கொட்டகை உள்ளே ஒரு Benchம் சில நாற்காலிகளும் தான்.

என்னுடைய அதிகாரி நன்கு படித்த ஒரு இடைநிலை பொறியாளர்.திரு ராஜன் என்று வைத்துக்கொள்வோம்.
இவரிடம் நான் மொத்தமாக 9 மாதங்கள் தான் வேலை பார்த்தேன்.இந்த சமயத்தில் நாங்கள் வெறும் தம்மாத்துண்டு செங்கல் கட்டுவேலை மாத்திரம் தான் போட்டோம்.இதற்குள் 5 or 6 times budget போட்டுவிட்டோம்.இந்த Project முடிக்க 5 வருடங்கள் ஆகியிறுக்கும் அதற்குள் நான் வேறு Companயில் சேர்ந்து 3 வருடத்தில் ஒரு Cement Plant முடித்துவிட்டேன்.

இந்த மாதிரி நிருவனங்களில் வேலை செய்ய சில முக்கியமான தகுதிகள் வேண்டும்.

1.மனசாட்சியை கழற்றி வைத்து விட வேண்டும்
2.யாரும் யாரையும் காட்டிக்கொடுக்க கூடாது.
3.யார், எவருடைய Group என்று தெரிந்து கொள்ளவேண்டும்.
4.திருட்டு போவதை,திருடுபவர்களை தெரிந்தாலும் காட்டிக்கொள்ளக்கூடாது.நம்முடைய பங்கு சரியாக கிடைக்கிறதா என்பதில் மட்டும் குறியாக இருக்கவேண்டும்.இதில் நாம் ஏமாந்துவிடக்கூடாது.இல்லாவிட்டால் "பிழைக்கத் தெரியாதவன்" என்ற பட்டம் கேட்காமல் கிடைக்கும்.
5.உனக்கு அறிவு இருந்தாலும் அதை நிருபிக்க முயலக்கூடாது.
6.இது ஒரு சிலந்தி வலைப்பின்னல் யாரும் வெளியில் போக முடியாது.
7.நேர்மையாக இருக்க முயற்சிக்க கூடாது.
8.கொஞ்சம் Rouge ஆக இருப்பது நல்லது.
9.கை தாராளமாக நீள வேண்டும்.

ஆமாம் இவ்வளவு எழுதுகிறாயே,அங்கு நேர்மையானவர்களே கிடையாதா?

நிச்சயம் உண்டு,1000 அல்லது 10000யில் ஒன்று,அவரை கண்டுபிடித்து நம் திறமையை நிருபிப்பதற்கு முன்பு உன்னைச்சுற்றி மிகப்பலமாக வலை சுற்றப்பட்டு இருக்கும்.
இதில் இருந்து மீள்வது பிரம்ம பிரயத்னம்.

சரி,நீ எப்படி மீண்டாய்?

ஆரம்ப நிலையில் உள்ள ஊழியன்,Temporary Staff என்ற தகுதி,நல்ல நண்பன்(Mr.Jagannathan) மற்றும் அங்கிருந்த நேர்மையான அதிகாரி.

மீண்ட கதை அடுத்த பதிவில்..

No comments: