Monday, October 29, 2007

வீடியோவில் இருந்து படம் எடுக்க.

கொஞ்ச நாட்களாக பிரிசன் பிரேக் தொடர் பார்த்துக்கொண்டு இருந்தேன்.அதை நான் ரியல் பிளேயர் மூலம் பார்த்தேன்.அப்படி பார்த்துக்கொண்டு இருக்கும் போது சில காட்சிகளை படமாக்க மாற்ற இயலுமா என்று கீ போர்டில் உள்ள Print Screen அழுத்தி எடுக்கப்பார்த்தேன்.

முயற்சி தோல்வியில் முடிந்தது.

அதுக்கு வழியில்லாமலா போய் விடும் என்று கூகிளாண்டவரிடம் கேட்டேன்.நிறைய பதில் கொடுத்தார்.ஆனால் என்னுடைய விருப்பம் வேறு மாதிரி இருந்தது.எந்த மென்பொருளையும் நிறுவாமல், இருக்கும் மென்பொருளை வைத்தே ஒப்பேற்ற வேண்டும்.

அதற்கும் வழி சொல்லியிருந்தது இங்கே.

அப்படி எடுத்து, அதை கொஞ்சம் வெட்டி இங்கு போட்டுள்ளேன்.

பாருங்கள்.



சரி,அங்கெல்லாம் போக எனக்கு நேரம் இல்லை என்கிறீர்களா??

இந்த செய்முறை W2K க்கு

வழி 1: உங்கள் வெறும் திரையில் எலிக்குட்டி மூலம் வலது சொடுக்கி Properties--->seettings--- Advanced---->Trouble Shooting--->Hardware Accelaration ஐ none பக்கம் கொண்டு வந்துவிடுங்கள்.

வழி 2: மேல் சொன்னதை செய்த பிறகு Real Player---->Tools--->Preference---->Hardware--->Video Card Compatability ஐ இடது பக்கத்துக்கு இழுத்துவிடுங்கள்.

அவ்வளவு தாங்க.

இப்ப Print Screen மூலம் வீடியோவில் உள்ளவற்றை படமாக சேமிக்க முடியும்.

Print Screen க்கு அப்புறம் எப்படி என்பதையும் சொல்லிடுங்களேன்,புதியவர்களுக்கு வசதியாக இருக்கும் என்கிறீர்களா?

இங்கு பார்க்கவும்.

இந்த திரைபிடித்தல் செய்ய மினிமம் உங்கள் வின்டோஸ் கணினியில் ஆபீஸ் மென்பொருள் இருந்தால் சுலபம்.
அதுவும் பவர் பாயிண்ட் இருந்தால் வசதி.
சரி மேட்டருக்கு வருவோம்.
நீங்கள் பிடிக்க நினைக்கும் திரையை திறந்து வைத்துக்கொள்ளவும்.
உங்கள் தட்டச்சில் F12 க்கு பக்கத்தில் பிரிண்ட் ஸ்கிரீன் என்ற கீ இருக்கும்,அதை ஒரு தட்டு தட்டிடீங்க.

இப்போது பவர் பாயிண்டை திறக்கவும்.


1.Blank Presentation.


2.Choose Layout-- கீழே உள்ள கடைசி கட்டத்தை தேர்வு செய்துகொள்ளவும்.(Blank)


3.அந்த வெள்ளைப்பகுதில் உங்கள் எலியை ரைட் கிளிக்கவும்,பேஸ்ட் Select செய்தால் அது அங்கே ஒட்டிக்கொண்டுவிடும்.


4.தேவையான அளவில் சுருக்கிக்கொண்டு பிறகு சேமிக்கும் போது அதை JPEG பைலில் சேமிக்க வேண்டும்.


அவ்வளவு தான்.

Sunday, October 28, 2007

சார்லி சாப்ளின்

என்னை கவர்ந்த பல நடிகர்களிடைய இவருக்கு தனியிடம் உண்டு.
அதே நினைவுடன் ஏதாவது சலனப்படம் இருக்கிறதா? என்று தேடிய போது சுமார் 70 வருடங்களுக்கு முன்பு அவர் பேசிய வசனம் இங்கே.

நாட்டின்/உலகத்தின் நிலைமை இன்னும் மாறாமல் இருப்பது தான் இதில் அதிசயம்.

சும்மா ஒவ்வொரு வரியும் சாட்டையை கொண்டு அடிப்பது போல் இருக்கிறது.

பார்த்து மகிழுங்கள்.

Chalie Chaplin Political Speech

Add to My Profile | More Videos

Wednesday, October 24, 2007

சீனக்குழந்தையின் பரத நாட்டியம்

இது போன வாரம் ஸ்ரீ சிவா கிருஷ்ணா கோவிலில் நடந்த நிகழ்ச்சியின் கடைசி சலனப்படம்.
இதில் ஆடியுள்ள சீனக்குழந்தைகளின் அபிநயத்தை பாருங்கள். So Cute.
மத்தியில் உட்கார்ந்திருக்கும் மீனாட்சி குழந்தையின் தேர்வும் நடிப்பும் அருமை.
அப்படியே ஒரு மாமியின் கை மிருதங்க ரசிப்பையும் & தட்டலையும் பாருங்கள்.அவர்கள் பையன் வாசிக்கிறான் போலும்.
பார்த்து மகிழுங்கள்.

Tuesday, October 23, 2007

குழந்தைகள் பரத நாட்டியம்.

சிங்கை ஸ்ரீ சிவா கிருஸ்ணா கோவிலில் போன வெள்ளி அன்று நடந்த நவராத்திரி கலை விழாவில் ஆடிய குழந்தைகளின் சலனப்படம் கீழே.




அடுத்த பகுதி பிறகு வரும்.

Monday, October 22, 2007

நவராத்திரி விழா- பாகம் 1

போன வெள்ளியன்று நடந்த நவராத்திரி கலை விழாவில் நடந்த சில சலனப்படங்கள் இங்கு உங்கள் பார்வைக்காக...

இப்போதைக்கு பாகம் 1 மாத்திரம்.

மற்றவை தொடரும்.

Saturday, October 20, 2007

நவராத்திரி விழா- சிங்கப்பூர்

நேற்று காலை நம்ம KRS பதிவை படித்தவுடன் தான் சிங்கையில் இருக்கும் துர்கா வீணை வாசிக்கப்போது எனக்கு தெரிந்தது. அப்போது அவர் கூகிள் டாக்கில் இருந்ததால் எங்கு என்ற விபரம் கேட்டு தெரிந்துகொண்டு,அதன் பிறகு வரைப்படம் மூலம் எங்கிருந்து போனால்
சுலபமாக இருக்கும் என்று பார்த்து முடிவு செய்தேன்.

பேசிக்கொண்டிருக்கும் போதே டீச்சரிடம் இருந்து மெயில்.. அப்பா நண்பர்களே நம்மில் ஒருவர் வீணை வாசிக்கிறார் போய் புகைப்படம் எடுத்து போடுங்கள் என்று.என்னிடம் கேமிரா உள்ளது..ஆனால் விடியோ கேமிரா இல்லை. கோவியார் வந்தால் அவரை படம் எடுக்கச்சொல்லலாம் என்று நினைத்திருந்தேன்.திடிரென்று ஒரு யோஜனை அலுவலகத்தில் உள்ள வீடியோ கேமிரா தூங்கிக்கொண்டு தானே இருக்கிறது அதை எடுத்துப்போகலாம் என்று முடிவு செய்து அதன் மின்கலங்களை மின்னேற்றம் செய்து வைக்க ஆரம்பித்தேன்.

நான் வேலை செய்யும் இடத்தில் இருந்தே நேரடி பேருந்து சேவை இருந்தும் நிறைய கால அவகாசம் இருப்பதால் வீட்டுக்குப் போய் அங்கிருந்து ரயில்/பேருந்து வழி போகலாம் என்று வீட்டுக்குப் போய்விட்டேன்.இதற்கிடையில் கோவியார் கூப்பிட்டு அவரால் வரமுடியாததை சொன்னார்.

சுமார் 7.20 க்கு கிளம்பி உட்லேண்ட்ஸ் போய் தடம் 178 மூலம் போய் சேர்ந்தேன்.சாலையில் கார்கள் வரிசை பிடித்து நிற்கும் போதே தெரிந்தது இங்கு தான் ஏதோ நிகழ்ச்சி என்று.நுழைவாயிலில் போகும் போதே குழந்தைகள் அழகழகான ஆடைகளுடன் முன் வரிசையில் உட்கார்ந்திருந்தார்கள்.நேராக போய் சாமி கும்பிட்டுவிட்டு மேடை பக்கம் வரவும் நிகழ்ச்சி ஆரம்பித்தது.

முதல் படம்



இரண்டு



மூன்றாவது



நான்காவது



ஐந்தாவது



ஆறாவது (தலைச்சுட்டி) அம்மாக்களுக்கு செம வேலை இருந்திருக்கும்.எல்லாம் ஒவ்வொரு "பூ".



ஏழாவது



எட்டாவது



பல சமயம் 2 கேமிராக்களை வைத்து படம் எடுக்க முடியாததால் படங்கள் அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்காது.ஏதோ பார்த்து வையுங்கள்.

something is better nothing.

யோவ்! இதுல யாருயா துர்கா? அதைப்போடாமல் என்ன போட்டோ பதிவு எல்லாம்? என்று கேட்கிறீர்களா?

அவுங்க என்று நான் நினைத்திருக்கும் படங்களை அவருக்கு அனுப்பியுள்ளேன்.இஷ்டப்பட்டால் அவர் ஏற்றுவார்.

பின் குறிப்பு: குழந்தைகளை வரிசைகிரமமாக மேடைக்கு அனுப்பிக்கொண்டிருக்கும் ஒரு பெண்மணி கேட்டார்... உங்கள் குழந்தை இங்கு பாடுகிறதா? என்று.அதற்கு நான்,எனக்கு தெரிந்தவர் ஒருவர் வீணை வாசிக்கிறார் அதை வீடியோ எடுக்க வந்துள்ளேன் என்றேன்.
என்னுடைய வீடியோவில் இருக்கும் LCD மூலம் என் பின்னால் இருந்து பார்த்துக்கொண்டிருப்பார் போலும்.

ஓரளவு துர்காவை அனுமானிக்க முடிந்தாலும்.பொது இடத்தில் பேச வேண்டாம் என்பதால் அவரை சந்திக்கவில்லை.அதனால் அவர் அப்பா/சகோதர்களை சந்திக்கும் வாய்ப்பையும் இழந்தேன்.

இன்னொரு வாய்ப்பு கிடைக்காமலா போகும்?

Thursday, October 18, 2007

சிங்கப்பூர் - வறுமை

ஆசியானில் சிங்கப்பூரை சுற்றி இருக்கும் நாடுகள் வறுமையில் உழன்று கொண்டு இருக்கும் போது எப்படி சிங்கப்பூர் மட்டும் தப்பிப்பிழைத்தது???

மதியுரை அமைச்சர் திரு லி க்யூவான் யூ பட்டியலிட்டு இருப்பதை இன்று (15/10/07) செய்திகளில் கேட்டேன்.. இதோ உங்களுக்காக

1.நல்ல திறமையான/ஊழலற்ற அரசாங்கம்.

2.நல்ல தலமைத்துவம்.

3.வாய்ப்புகளை நன்கு பயண்படுத்திக்கொள்ளும் தொழிலதிபர்கள்/சிங்கப்பூரர்கள்.

ஞாபாகத்திலாவது வைத்துக்கொள்வோம். ஹூம்!!

சிங்கை "சியான்"

நம்மூரில் சியான் என்றால் பலருக்கும் தெரிந்திருக்கும் ஆனால் இங்கு??

ஆங்கிலத்தில் சொன்னால் பலரும் புரிந்துகொள்வார்கள்.அந்த விஷயத்துக்கு பிறகு வருவோம்.

நேற்று இரவு சிங்கைக்கு வந்து சேர்ந்தது A380 ரக விமானம்.இரட்டை அடுக்கு கொண்ட விமானம் 12 மணி நேர பிரயாணத்துக்குப் பிறகு ஃபிரான்ஸ்- டோலோஸ் நகரில் இருந்து சுமார் 6.40க்கு சிங்கை முனையம் 3 க்கு வந்து சேர்ந்தது.அதை வர வேற்க பிரதமர் உட்பட பலர் வந்திருந்தனர்.இதைப் போல இன்னும் 19 விமானங்கள் வாங்க இருக்கிறது சிங்கப்பூர் ஏர் லயன்ஸ். அதற்குப் பிறகு தன்னிடம் உள்ள சில 747 ரக விமானங்களை விற்க உள்ளது.யாருக்காவது வேண்டுமானால் அவர்களை தொடர்புகொள்ளவும். :-)



இந்த விமானத்துக்காகவே கட்டப்பட்டது போல உள்ளது முனையம் மூன்று.இது சுமார் 1.9 பில்லியன் டாலர் செலவில் கட்டப்பட்டுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது.





இதன் வரவை ஒட்டி பேசிய முதல்வர் SIA வின் வெற்றிக்கு கடும் உழைப்பை காரணமாக சொல்லியுள்ளார். கவனிக்க "உழைப்பை".சுற்றி உள்ள பெரிய பெரிய தேசங்களால் இன்னும் முடியாததை சிங்கை செய்துகாட்டியுள்ளது பெருமைக்குரியது.சிங்கப்பூர் மகுடத்தில் இது இன்னொரு வைரக்கல்.

சியான் பற்றி வருவோம்.நம்மூரில் சியான் என்றால் ஒரு "தல" மாதிரி இமேஜ் தானே??

அப்படி என்றால்.. Mr. Lee Hsien Loong கூட சிங்கையின் தல தான்.இம்மாம் பெரிய விமானத்தை முதல் முதலில் கொண்டு வந்த "தல". அவர் தான் பிரதம மந்திரி.

சிங்கை சும்மா நிமிர்ந்து நிற்கிறது.

Wednesday, October 17, 2007

தலைவலியா?

நம்மில் பலர் மைக்ரேன் அல்லது வேறுவிதமான தலைவலிக்கு சும்மா அப்படியே ஒரு பெனடாலை போட்டு சரி பண்ணிக்கொள்கிறோம்.இதே போல் நானும் பல தடவை செய்துள்ளேன்.
சற்று முன் எனக்கு வந்த மின் அஞ்சலை இங்கு இணைத்துள்ளேன்.படித்து முயற்சித்து பார்க்கவும்.அதோடிலில்லாமல் பெனடால் பற்றி சொல்லியுள்ளதையும் கவனித்துக்கொள்ளவும்.இதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை.

அந்த மின்னஞ்சல் இது தான்.

Try 100PLUS & WATER - NOT PANADOL

DON'T TAKE PANADOL AND PANADOL ACTI FAST AND PANADOL SOLUBLE especially if you have gastric problems FYI...

One real story from a friend....

My husband was working in a hospital as an IT engineer, as the hospital is planning to set up a database of its patient. And he knows some of the doctors quite well. The doctors used to tell him that whenever they have a headache, they are not willing to take PANADOL (PARACETMOL).

In fact, they will turn to Chinese Herbal Medicine or find other alternatives.This is because Panadol is toxic to the body, and it harms the liver. According to the doctor, Panadol will reside in the body for at least 5 years. And according to the doctor, there used to be an incident where an air stewardess consumes a lot of panadol during her menstrual as she needs to stand all the time. She's now in her early 30's, and she needs to wash her kidney (DIALYSIS) every Month.

As said by the doctor that whenever we have a headache, that's because it is due to the electron/Ion imbalance in the brain. As an alternative solution to cope with this matter, they suggested that we buy 1 or 2 cans of isotonic drink ( eg.100PLUS), and mix it with drinking water according to a ratio of 1:1 or 1:2 (simply, it means one cup 100plus, one cup water.or 2 cups water). I and my husband have tried this on several occasions, and it seems to work well.

Another method will be to submerge your feet in a basin of warm water so that it brings the blood pressure down from your throbbing head. As Panadol is a pain killer, the more Panadol you take, the lesser would be your threshold for pain (your endurance level for pain). We all will fall ill as we age, for woman, we would need to go through childbirth.. Imagine that we had spent our entire life popping quite a substantial amount of Panadol (Pain Killer) when you need to have a surgery or operation, you will need a much more amount of general anesthetic to numb your surgical pain than the average person who seldom or rarely takes Panadol .

If you have a very high intake of Panadol throughout your life (Migraine, Menstrual cramps) it is very likely that normal general anesthetic will have no effects on you as your body is pumped full with panadol and your body is so used to pain killer that you would need a much stronger pain killer, Morphine?? Value your life, THINK b4 you easily pop that familiar pill into your mouth again.

Please send this to people you care about.

Monday, October 15, 2007

கேட்கணும் ... பிடிக்கணும்

கொஞ்ச மாதங்களுக்கு முன்பு இணையத்தில் இருந்து எப்படி பாட்டு பிடிக்கனும் என்று சொல்லியிருந்தேன்.அது கொஞ்சம் வன்பொருட்கள் வாங்கி சொருக வேண்டிய விஷுயம்,இப்போ அது கூட தேவையில்லையாம்.

கீழே கொடுத்துள்ள "சுட்டி" யில் சொடுக்கவும்.

"சுட்டி"

இதை ஃபயர்பாக்ஸில் add-on ஆக நிறுவிக்கொள்ளவும்.கீழே உள்ள மாதிரி ஒரு டூல் பார் வந்து விடும்.கேட்கவேண்டிய பாடலை சொடுக்கவும் அப்படியே இந்த டூல் பாரில் உள்ள Record பட்டனை சொடுக்கினால் முடிந்தது.அப்படியே பாட்டை mp3 யாக மாற்றி கொடுத்துவிடுகிறது.


நாட்டுக்கட்டையை பிடிச்சி பார்த்தேன்... நல்லாத்தான் இருக்கு. :-))


Enjoy மக்கள்.

வசந்தம் - நட்சத்திரம்

பட உதவி: வசந்தம் சென்ரல்.

இங்கு சிங்கையில் உள்ள தொலைக்காட்சியில் தமிழை கேட்க வேண்டும் என்றால் இந்த சேனைலைத்தான் தேட வேண்டும்.கம்பி வடம் மூலம் சன்/விஜய் தொலக்காட்சிகள் வருகிறது என்றாலும் உள்ளூர் நிகழ்வுகளையும் கலைஞர்களையும் ஊக்கப்படுத்தி அவர்கள் நிகழ்ச்சியை படைக்க்கும் ஒரே தொலைக்காட்சி "வசந்தம் சென்ரல்".



வீடு என்னுடையது இல்லை என்றதும் நான் பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்வுகள் மிகவும் சுருங்கிவிட்டன. செய்திகள் மட்டும் பார்ப்பேன் அதனூடே வரும் விளம்பரங்களில் இந்த வசந்தம் ஸ்டாரின் பாட்டுப்போட்டிகள் பற்றியும் வந்தது.அப்படி வந்த போது இந்த குரல்/வித்தியாசமான தமிழ் பாடும் முகம் கவர்நதது.ஒரே ஒரு தடவை தான் கேட்டேன் அப்படியே அசந்துவிட்டேன்.

நேற்று தான் கடைசி நான்கு பேர்களுக்குள் இடையே நடந்தது.இதைக்கான அமைச்சர் ஈஸ்வரன் வந்திருந்தார். அவர் தான் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.

நடுவர்களின் முடிவும் SMS வாக்கும் சேர்ந்து எபி சங்கரா என்பவருக்கு முதல் பரிசை கொடுத்தது.இரண்டாம் நிலையில் வந்தவர் தான் நீதிபதிகளால் தேர்ந்தெடுக்கபட்டும் SMS முடிவுகள் நிலமையை இவர் பக்கம் சாய்த்துவிட்டது.

அவர் பாடும் ஒரு பாடல் இங்கு கிடைத்தது. பார்த்து மகிழுங்கள்.ஏற்றியவருக்கு மிக்க நன்றி.

பாடல் 1

பாடல் 2

எபி சங்கரா... மனமார வாழ்த்துகிறேன். கூடிய சீக்கிரம் தமிழ் கற்றுக்கொள்ளுங்கள்.சில வார்த்தைகள் பேசுவதற்குள் திணறிவிடுகிறீர்கள்.

யூ டியூபில் பார்க்கமுடியாதவர்களுக்காக...

W2K வும் தமிழும்

போன வாரம் என் பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர் "கால் கடுதாசி" கொடுத்திட்டு போய்விட்டார்.அவர் உபயோகித்த கணினி W2K இயங்கு தளம் ஆனால் என்னுடையது Win98.என்னுடைய கணினியில் தமிழை கொண்டு வருவதற்குள் போதும் போதும் என்றிருந்தது அதனால் அவருடைய W2K கணினியை உபயோகப்படுத்தலாம் என்று நினைத்து ஆரம்பித்தேன்.
வழக்கம் போல் தமிழ்மணம் போனால் "பல்லிலித்தது".
நமக்குத்தான் தெரியுமே என்ன செய்யனும் என்று..

Start--->control panel ---> Regional Option ----> select Indic font and apply அவ்வளவு தான்.

அந்த அப்ளை அனுப்பியவுடன் உங்க 2000 வட்டை கேட்க்கும். அங்கு தான் பிரச்சனை.பல அலுவலக கணினிகளின் வட்டு வேறு எங்கோ இருக்கும் இல்லை என்றால் இருக்கவே இருக்காது.இந்த சூழ்நிலையில் என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருக்கும் போது அது என்னென்ன கோப்புகள் தேவைபடுகிறது என்று தெரிந்தால் அதை தறவிரக்கம் செய்து நிறுவிவிடலாம் என்று பட்டது.அப்படி முயற்சிக்கும் போது கிடைத்த கோப்புகள் இது. இவை அனைத்தும் இணையத்தில் கிடைக்கிறது.தேடி எடுத்துக்கொள்ளவும்.

என்னை மாதிரி அவஸ்தை படுபவர்களுக்காக கோப்புக்கள் விபரம் கீழே கொடுத்துள்ளேன்.

1.c_iscii.dll

2.kbdindev.dll

3.kbdintam.dll

4.kbdinmar.dll

5.kbdinhin.dll

6.mangal.ttf

7.latha.ttf.

கிடைக்காதவர்கள் சொல்லவும்...தனி மின் அஞ்சலில் அனுப்பிவைக்கிறேன்.