Showing posts with label தொலைக்காட்சி. Show all posts
Showing posts with label தொலைக்காட்சி. Show all posts

Sunday, September 14, 2008

இந்த நிகழ்வைப் பற்றி தெரியுமா?

இது இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முந்தைய கதை...

ஹூம்ஸும் இந்திய தேசிய காங்கிரசும்.

மேல்விபரங்களுக்கு நகர் படத்தை பார்க்கவும்.



நன்றி:பி பி சி

Friday, June 13, 2008

ரஜினி மந்திரவாதியா?

இந்த சலனப்படம் ஏதேச்சயாக பார்க்க நேர்ந்தது.இங்குள்ள தொலைக்காட்சியில் “நாம்” நிகழ்ச்சியில் போட்டார்கள்.

பலருடன் நடிந்த அனுபவம் இந்த அனுபம் கேருக்கு, அவர் நம் நடிகர் ரஜினிகாந்தைப்பற்றி சொல்லியுள்ளதை கீழே உள்ள நகர் படத்தில் பார்க்கவும்.



Hats Off Mr Rajinikanth.

நன்றி: வசந்தம் சென்ரல்.

Tuesday, June 10, 2008

யோகா - சிங்கையில்

ஊர் முழுக்க,அல்ல உலகம் முழுக்க பரவ ஆரம்பித்திருக்கும் இந்த யோகா சிங்கையில் கல்லூரிகளுக்குள்ளும் பரவ ஆரம்பித்துவிட்டது.

போன வாரம் செய்தியில் வந்த தொகுப்பு இது,பார்த்து மகிழுங்கள்.





நன்றி: வசந்தம் சென்ரல்

Sunday, May 25, 2008

தமிழ் பேச்சாளர்கள்.

சிங்கையில் தமிழ் வாசிக்க வைக்க ஒரு கூட்டம் என்று வைத்து அதற்கு இந்தியாவில் இருந்து பிரபலங்களை கூட்டி வந்து மேலும் மெருகேற்றுகிறார்கள்.அதோடு பேச்சாளர்களையும் உருவாக்குவதிலும் சில இம்மாதிரியான நிகழ்வுகளை நடத்தி மக்களை உற்சாகப்படுத்துகிறார்கள்.

மீதியை நகர் படத்தில் காணலாம்.



நன்றி:வசந்தம் சென்ரல்.

Saturday, May 24, 2008

"ழ” வரவில்லை என்றால்??

இந்த ”ழ” தமிழ்நாட்டில் மட்டுமல்ல இங்கும் பலரையும் பழிவாங்குகிறது.கவலை வேண்டாம் அதை திறமையாக சமாளிக்க வழி இருக்கு.

அப்படி வராது என்று தெரிந்தால் எப்படி சமாளிப்பது??

குழந்தையை "Baby" ஆக்கிடவேண்டியது தான்.

கீழே உள்ள சிறிய நகர் படம் ஒன்றை பாருங்கள்.

so,but,because போன்ற வார்த்தைகள் தமிழாகிப்போய்விட்டதால் இதையும் நாம் அதனுடன் சேர்த்துக்கொள்ளலாம்.




நன்றி:வசந்தம் சென்ரல்

Sunday, May 18, 2008

முகவர் கட்டணம்

இங்கு (சிங்கையில்) வீடு வாங்க / விற்க முகவர்கள் உண்டு அவர்களுக்கு எவ்வளவு சேவைக்கட்டணம் எவ்வளவு கொடுக்கனும் என்று பல விபரங்கள் பல இடத்திலும் இருந்தாலும்,
இந்த நகர் படத்தை பாருங்க,எளிமையாக அதே சமயம் விவரமாக சொல்லியுள்ளார்கள்.

சிங்கையில் புதிதாக வீடு வாங்குபவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.




நன்றி: வசந்தம் சென்ரல்

எஸ். ராமகிருஷ்ணன்- சிங்கையில்

போன வாரம் செய்திகள் கேட்டுக்கொண்டு இருக்கும் போது சொன்னது.

இங்கு நடைபெரும் " வாசிப்போம் நேசிப்போம்" நிகழ்ச்சிக்காக சிங்கை திரு ராமகிஷ்ணனை அழைத்துள்ளது.ஜூலை மாதத்தில் அவர் சிங்கை வரக்கூடும். அவரை சில புத்தகங்களை தேர்ந்தெடுத்துக் கொடுக்கச்சொல்லியுள்ளதாகவும் அதில் சொல்லியுள்ளார்கள்.



நன்றி: வசந்தம் சென்ரல்

சிங்கையில் தமிழ் வாசிப்பை பரவலாக்கும் முயற்சிகளில் இவரை மாதிரி பிரபலங்களை இந்தியாவில் இருந்து கூட்டிவந்து இந்த நிகழ்ச்சிக்கு மெருகேற்றுகிறார்கள்.

போன வருடம் திரு சா.கந்தசாமியை அழைத்துவந்து பெருமைபடுத்தினார்கள்.

அந்த நகர்படம் இங்கே..






இம்முறை போகமுடியுமா என்று தெரியவில்லை.போனால் பதிவிடுகிறேன்.

Wednesday, May 07, 2008

குட்டியின் “குறள்”

உணர்ச்சிப் பிரவாகத்தை பார்த்து மகிழுங்கள்.




நன்றி: வசந்தம் சென்ரல்

Sunday, April 13, 2008

உருட்டுச் சக்கரம்

இதைப்பற்றி ஏற்கனவே இங்கு சொல்லியிருந்தேன்.இந்த மகா சக்கரம் வரும் 15ம் தேதியில் இருந்து அதிகாரப்பூர்வமாக பொதுமக்களுக்கு திறந்துவிட இருக்கிறார்கள்.

30 நிமிட நேர பயணத்துக்கு 30 வெள்ளிக்கட்டணம்.குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் சிறிய சலுகை அளிக்கப்பட்டுள்ளதாம்.பலரும் இந்த கட்டணம் அதிகமாக இருப்பதாக குறைப்பட்டுக்கொள்வதை கீழே காணலாம்.

நல்ல கால நிலையில் இந்தோனேஷியாவையும் மலேசியாவின் தென்கோடி முனையையும் காணமுடியும் என்று சொல்கிறார்கள்.

மீதியை அவர்கள் சொல்கிறார்கள்.



நன்றி: வசந்தம் சென்ரல்

மொழி சாகுமா?

ஒரு மொழி அதுவும் ஒரு சிறிய மாநிலத்தில் மட்டுமே பரவலாகப்பேசப்படும் மொழி சாகுமா?
அப்படி என்றால் எப்படி சாகும்?

அதை சிங்கை வாழ் தமிழ் பேசும் இந்தியர்கள் எப்படி வாழவைக்க முயற்சிக்கிறார்கள் என்பதை அது எப்படி சாகும் என்பதையும் சொல்கிறார்கள்,வாருங்கள் கேட்போம்.

கீழே உள்ள நகர்படத்தின் மூலம் காணலாம்.

வரும் 27ம் தேதிவரை சிங்கையில் நடக்கும் வெவ்வேறு தமிழ் மொழிக் கொண்டாடங்களின் ஒரு பகுதி இது.

பார்த்து மகிழுங்கள்.



நன்றி: வசந்தம் சென்ரல்.

Friday, April 11, 2008

வீணை நாதம்

காட்சிக்கு வைக்கும் வீணைதான் என்றாலும் மீட்டும் போது நம்மையும் சேர்த்து மீட்டுது.

மீதி அதை மீட்டுபவரே சொல்கிறார்,பாருங்கள்.



நன்றி: வசந்தம் சென்ரல்.

நெகிழி ஆட்டம்

நெகிழி அதாங்க பிளாஸ்டிக்கை வைத்து யார் யாரோ என்னென்னோவோ செய்யும் வேலைகளில் இது வித்தியாசமாக இருக்கு பாருங்க.

கீழே ஓடும் ரயிலின் மூலம் வெளியேற்றப்படும் காற்றை வைத்து ஒரு ஆட்டம் போடுவதை கீழே உள்ள சலனப்படத்தில் பாருங்கள்.




நன்றி:வசந்தம் சென்ரல்

Tuesday, April 08, 2008

திருக்கல்யாணம்

திருப்பதி போய் திருக்கல்யாணத்தை தரிசிக்கமுடியாதவர்களுக்காக,வெங்கடாஜலபதி நகைகளை திருப்பதியில் இருந்து எடுத்துவந்து சென்னையில் கல்யாணம் செய்துவைத்து அழகு பார்த்திருக்கிறார்கள்.

அங்கு பார்க்க முடியாதவர்களுக்காக...

கீழே உள்ளது சலனப்படம்.





நன்றி: வசந்தம் சென்ரல்.

Monday, April 07, 2008

தமிழ் பேசும் அமைச்சர்

போன 5ம் தேதியில் இருந்து சிங்கப்பூரில் தமிழுக்காக விழா ஒன்று நடந்துவருகிறது,அது 27ம் தேதிவரை நடக்க இருக்கிறது.

நேற்று நடந்த இந்த விழாவில் இங்குள்ள தொழிற்துறை அமைச்சர் பேசும் அழகான தமிழை கேளுங்கள்.போன வருடத்தில் இவர் இப்படி பேச மிகவும் கஷ்டப்பட்டார்.பிரத்யோக பயிற்சி எடுத்துக்கொள்கிறார் போலும்,அசத்துகிறார்.

பாருங்கள்.


வாழ்த்துக்கள்: தொழிற்துறை அமைச்சர் திரு ஈஸ்வரன்.



நன்றி:வசந்தம் சென்ரல்

ஹொகேனெக்கல்

இப்போது ஓரளவு சூடு குறைந்த பிரச்சனையை இரண்டு நாட்களுக்கு முன்பு இங்குள்ள செய்தியில் சொன்னபோது எடுத்தது.

நேரிடையாக பார்க்கமுடியாதவர்களுக்கு சமர்ப்பனம்.



நன்றி:வசந்தம் சென்ரல்

Monday, March 31, 2008

தமிழுக்கு விழா

சிங்கப்பூர் சின்ன நாடு தான் அதில் தமிழர் இனமும் சின்னது தான் ஆனால் அரசாங்க மொழியாக்கப்பட்டதும் அதற்கான மரியாதை தர இந்த அரசாங்கமும் மனிதர்களும் தவறுவதில்லை.

கீழே உள்ள சலனப்படத்தை பாருங்கள்,தமிழுக்காக 22 நாட்கள் விழா எடுக்கிறார்களாம்.



நன்றி: வசந்தம் சென்ரல்

Saturday, March 29, 2008

துர்கா வீணை வாசித்த கோவிலுக்கு .....

கொஞ்ச மாதங்களுக்கு முன்பு நம் சகபதிவர் துர்கா வீணை கச்சேரி நடந்தது பற்றி ஒரு பதிவு போட்டிருந்தேன்.அப்போது அந்த கோவில் புனரமைப்பு வேலைகளில் இருந்தது.

போன வாரம் அந்த வேலைகள் எல்லாம் முடிந்து குடமுழுக்கு செய்யப்பட்டதை காட்டும் சலனப்படம் கீழே உள்ளது,பார்த்து மகிழுங்கள்.



நன்றி: வசந்தம் சென்ரல்

புனிதப்பசு!!

சில நாட்களுக்கு முன்பு செய்திகளின் இந்த பசுவின் கதையை காண நேரிட்டது.

குஜராத்தில் ஒரு பசு தீவனத்தை சாப்பிடும் போதே பாலையும் கொடுத்துவிடுகிறதாம்.

மீதி விபரங்கள் கீழே..



நன்றி: வசந்தம் சென்ரல்.

இது கொஞ்சம் அதிகமாக தெரியலை!!

இரண்டு நாட்களுக்கு முன்பு நான் தொலைக்காட்சியில் பார்க்கும் ஒரே நிகழ்ச்சியில் இதை காண நேர்ந்தது.

சிங்கப்பூரையே தூக்கி போய் இந்தியாவில் வைத்தா சரியா போய்விடுமா? மிஸ்டர் மதராஸ்??
இருந்தாலும்,கன்னடக்காரர் தமிழில் பேசியதற்கு ஷொட்டு கொடுக்கலாம்.

அதற்கு அடுத்த மலையாள பைங்கிளி சொல்வது அபதத்திலும் அபத்தம்.இங்குள்ளவர்கள் தமிழை சுத்தமாக பேசுகிறார்களாம்.பேச மாட்டேன் என்பதால் தானே “வாசிப்போம் சிங்கப்பூர்” என்ற நிகழ்ச்சிகளை வைக்கிறார்கள்.அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை நீங்களே கேளுங்கள்.

சலனப்படம்,கீழே.



வழக்கம் போல்... நன்றி: வசந்தம் சென்ரலுக்கு.

Tuesday, March 25, 2008

பாட்டுத்திறன் போட்டி

தமிழ் வானொலி - ஒலி 96.8 ஏற்பாடு செய்திருந்த சிறுவர்களுக்கான பாட்டுத்திறன் போட்டி பற்றிய தொகுப்பு கீழே உள்ள சலனப்படத்தில் பார்க்கலாம்.





நன்றி: வசந்தம் சென்ரல்.