Wednesday, May 10, 2006

வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக்-1

கட்டுமானத்துறை பற்றி பார்பதற்கு முன்பு

நான் வந்த சில வழித்தடங்கள்...

தென்னிந்திய திருச்சபை உயர்நிலைப்பள்ளி (இப்பொழுது பெயர் மாற்றம் கண்டுவிட்டது)---இங்கு தான் 6 வதிலிருந்து 11 வது வரை படித்தேன்.இங்கு என்னை நேர்படுத்திய நண்பர்களையும் மற்றும் AAசிரியர்களையும் பிரிதொரு சமயத்தில் பார்ப்போம்.

1977-இந்த வருடம் தான் பள்ளி இறுதி ண்டு தேர்வு எழுதினேன்.நாங்கள் தான் கடைசி SSLC மாணவர்கள்.தேர்வு முடிவுகள் வந்தது 68% தான்.சில கல்லூரிகள்,Polytechnics ம் விண்ணப்பம் போட்டேன்.கடைசியில் அம்மாவின் யோஜனையின்படி Polytechnicயில் சேர்ந்தேன்.பக்கத்துவீட்டு "ரகு"Polytechnicயில் படித்ததால் அங்கு படிக்கச்சொன்னார்கள் என்று நினைக்கிறேன். எதற்கு சொல்கிறேன் என்றால் ஒரு ideaவும் இல்லாமல் Polytechnicல் சேர்ந்தேன்.வாழ்ந்த காலம் அப்படி.

இப்பொழுது மாணவர்களுக்கு "Aspire" மாதிரி இடங்கள் உள்ளது அதனால் உள்ள வழிகள் சில தெளிவாக தெரிகிறது.என்ன செய்யப்போகிறோம் என்று ஒரளவு தெரிகிறது.னாலும், இன்று கூட "எதிர்காலத்துகு உகந்த படிப்பு" என்பது யாராலும் உறுதியாக கூறமுடியாமல் தான் உள்ளது.அப்படியே கண்டுபிடித்து படித்தாலும் வேலை கிடைக்கும் என்பது நிச்சயம் கிடையாது.இப்பொழுது வாழும் முறை இப்படி உள்ளது.

1977-1980 Valivalam Desikar Polytechnicயில் படித்தேன்.

முதலாண்டு எல்லோருக்கும் பொது என்பதால் படிப்பதில் மட்டும் தான் கவனம் இருந்தது.வீட்டில் அப்பா "Strict" என்பதால்.... session mark விஷயத்தில்."விளையாடினால் தான் session mark போடுவார்கள் என்று"- பொய் சொல்லி cricket விளையாடிக்கொண்டு இருந்தேன்.சில சமயங்களில் Table Tennis ம்
விளையாட கற்றுக்கொன்டேன்.

இங்கு எனக்கு கற்பித்த சில AAசான்களை நினைவுகூர்வது மிக அவசியம்.

திரு.சம்பத்--கணக்கு இவர் circle போடுவது அவ்வளவு சரியாக இருக்கும்.Board யில் ஒரு புள்ளி வைத்து அட்டகாசமாக circle போடுவார்.அவர் சொல்லிக்கொடுக்கும் விதமே அலாதியே தான்.தவறு என்றால் அதை அப்படியே ஒப்புக்கொள்ளும் தன்மை அவரிடம் இருந்தது.
எப்படி??
முதல் வருட exam முடிவுகள் வந்தது.அவர் subjectயில் நான் 100 எடுத்திருந்தேன் னால் அவர் எனக்கு session mark 72 தான் போட்டிருந்தார்.அதில் யாரும் தவறு சொல்லமுடியாது ஏனென்றால் அது என்னுடைய பழைய performance வைத்து அவர் போட்டது.னால் Principal பார்த்துவிட்டு அவரிடம் "ஏன்?" என்று கேட்டிருகிறார்.இதை அப்படியே என்னிடம் சொல்லி அவர் வருந்துவதாகச் சொன்னார்.அவர் எனக்கு 80/85 போட்டிருந்தாலும் பெரிதாக ஏதும் நடந்திருக்காது.
இருந்தாலும் அவருடைய நேர்மை என்னை வியக்கவைக்கிறது.அவர் motor cycle விபத்தில் காயப்பட்டு காலமானார் என்று கேள்விப்பட்டு மிகவும் வருந்தினேன்.

திரு.கணபதி
இவரும் கணக்கு தான் எடுத்தார்.சும்மா பெரிய பெரிய கணக்குகளை அனாயசமாக சொல்லித்தருவார்.அவரிடம் குட்டு வாங்காத பையன்களே கிடையாது.கடன்காரா,நீ தேர மாட்டே,நீயெல்லாம் என்னத்த படித்து உருப்படபோற.. இப்படித்தான் அவர் அர்ச்சனை.னால் classஐ விட்டு வெளியில் வந்தால் ஜாலியாக பழகுவார்.பொதுவாக நல்ல மனிதர்.

மற்றவர்களை வரும் பதிப்புகளில் பார்க்கலாம்.

2 comments:

சிங். செயகுமார். said...

வணக்கம் நண்பரே !தமிழ்மண குடும்ப வருகைக்கு வாழ்த்துக்கள்.

வடுவூர் குமார் said...

நன்றி செயகுமார் அவர்களே