Saturday, May 27, 2006

பாலகுமாரன் கதைகள்

எனக்கு சிறுவயதில் இருந்தே கதை புத்தங்கள் படிப்பதில் அவ்வளவு interst இல்லை.பள்ளி விடுமுறை நாட்களில் நண்பர்களுடன் சின்ன சின்ன படம் போட்ட புஸ்தகங்களை மட்டும் படித்துக்கொண்டு இருந்தேன்.
நான் படித்த புத்தகங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
SSLC வரை
கடல் புறா
பொன்னியின் செல்வன்
சில சுஜாதா கதைகள்
அர்த்தமுள்ள இந்துமதம்
சில விவேகானந்தர் புத்தங்கள்.

SSLC Exam முடித்தவுடன் உள்ள விடுமுறையின் போது அப்பா வாங்கிக்கொடுத்த புத்தகங்கள் தான் " அர்த்தமுள்ள இந்துமதம்".திரு. கண்ணதாசனின் அருமையான புத்தகம்.மிக எளிமையாக எழுதப்பட்டுள்ளது.பல பாகங்களைக் கொண்டது எனது வாழ்கையில் முக்கிய திருப்புமுனையாக இருந்தது.
புட்டபர்த்தியில் வேலை செய்யும் போது நிறைய ஆன்மிக புத்தகங்கள் வாங்கிப்படிப்பதுண்டு.நல்ல விலைக்கழிப்புடன் ஆசிரமதில் வாங்கும் புத்தகங்களை படித்தவுடன் யாரிடமாவது கொடுத்துவிடுவதுண்டு.
சிங்கப்பூர் வந்தவுடன் அவ்வளவு Time கிடைக்காததால் புத்தககங்கள் படிப்பது குறைந்தது.எனது மனைவிக்கு யாரோ Library வசதிகளை காண்பித்துக் கொடுத்து தேவையான Registration cardம் வாங்கிக்கொடுத்த பிறகு தான் நிறைய தமிழ் புத்தகங்கள் இங்கும் இருப்பது தெரிந்தது.அப்படிக் கிடைத்த ஒரு புத்தகம் தான் திரு.பாலகுமாரன் எழுதியது.அதற்கு முன்பு இவர் யார் என்று கூட தெரியாது.
இவர் எழுதும் நடை எனக்கு மிகவும் பிடிக்கும்.அதை நான் சொல்வதைவிட என் மனைவி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்,ஏனென்றால் அவருக்கு இவர் எழுதும் நடை பிடிக்காது.
"என்ன? யாரோ பக்கத்தில் நின்று பேசுவது போல் உள்ளது"என்றார்-4 வருடங்களுக்கு முன்பு.
போன வருடம் இவர் எழுதிய "என் அன்புக் காதலா" என்ற கதையை படிக்க நேர்ந்தது.என் வாழ்கையின் பல நிகழ்வுகள் ஒத்துப்போனவுடன் அதை மனைவியிடம் சொன்னேன்.அதை ஞாபகம் வைத்துக்கொண்டு இங்கு(Yishun) உள்ள நூலகத்தில் தேடினோம்,கிடைக்கவில்லை.நூலகத்தில் உள்ள கனிணி மூலம் Locate செய்த பொழுது அந்த புத்தகம் வேறு ஒரு நூலகத்தில் இருப்பதாக காட்டியது.
சிங்கப்பூர் நூலக வசதிகளை வேறொறு பதிப்பில் பார்க்கலாம்.
மனைவி, Ang Mo Kio வில் உள்ள நூலக்கத்தில் தேடிப்பார்த்து கிடைக்கவில்லை என்றார்.சரி நான் வேறு ஒரு நூலகத்தில் பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு Bukit Batok நூலகத்தில் பார்த்தேன் மற்ற எல்லா புக்குகள் உள்ளது இதுமட்டும் இல்லை.மறுபடியும் கனிணியில் பார்த்தால் அங்கு தான் உள்ளது என்று காண்பித்தது.திரும்ப தேடினேன் ஆனாலும் கிடைக்கவில்லை,சோர்வுடன் வெறொரு Book ஐ எடுத்துக்கொண்டு திரும்பலாம் என்னும் போது....மின்னல் Idea
நூலகப் புஸ்தககங்களின் பின்புறம் கொஞ்சம் gap இருக்கும் அதில் சில புத்தகங்கள் விழ வாய்ப்புண்டு.இது ஞாபகம் வந்தவுடன் திரும்பிப்போய் பார்த்தால் அங்கு இருந்தது.
அதை நேற்று படித்து முடித்தவுடன் மனைவி சொன்னது
"இவரால் எப்படி மற்றவர்கள் உணர்வுகளை எழுத முடிகிறது?நான் என்ன என்ன பண்ண நினைக்கிறோனோ அதை இவர் எழுதியிருக்கிறார்"என்றார்
திரு பாலகுமாரனை பிடித்த ஒருவர் விமர்சனம் பண்ணுவதைவிட பிடிக்காத ஒருவர் சொல்வதுதான் நிஜமான விமர்சனமாக இருக்கும் என்பது என் நம்பிக்கை.
இது தான் பாலகுமாரன் கதையின் பலமும் கூட.

4 comments:

சிங். செயகுமார். said...

u can get the novel anbu kaathalaa in Ang Mo Kio library

வடுவூர் குமார் said...

இருக்கும்.என் மனைவியின் கண்ணில் படவில்லை போலும்.
ஏனோ புக்கிட் பதோக்கில் மட்டும் நிறைய புத்தகங்கள்.

Muse said...

அருமையான பதிவு.

வடுவூர் குமார் said...

Mr Jaikanth
Thanks a lot for those links.