Wednesday, November 19, 2008

புர்ஜ் துபாய் கட்டிடம்

இதைப் பற்றி பலரும் படம் போட்டு அருமை பெருமையெல்லாம் எழுதிட்டாங்க அதனால் வேறு ஒன்றும் சொல்ல இல்லை.

இங்கு வந்த நாள் முதலாக பக்கத்தில் போய் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் மட்டும் உறுத்திக்கொண்டு இருந்தது அது இன்று (19/11/08) மதியம் நிறைவேறியது அதுவும் எதிர்பாராமல்.

காலை 11 மணிக்கு தலை கூப்பிட்டு இன்னிக்கு ஒரு மெட்டிரீயல் டெஸ்ட் இருக்கு குத்தகைக்காரர் அழைத்துப்போவார் போய் வா என்றார், அத்தோடு இங்கிருந்து அங்கு போக வாகன நெரிசலில் 1 மணி நேரம் ஆகும் என்றார்.சரி,இங்கு சும்மா இருப்பதற்கு போய் வரலாம் என்று 12.30 க்கு கிளம்பினோம்.போகும் சாலையில் இக்கட்டிடம் தென்பட்டதும் அதை செல்பேசியில் பதிந்தேன் இதை பார்த்துக்கொண்டிருந்த நண்பர் அதன் கட்டிட விபரங்களை சொல்லி நாங்கள் அதன் அருகில் தான் வேலை பார்த்தோம் வேண்டுமென்றால் திரும்ப வரும் போது அங்கு போகலாம் என்றார்.



சுமார் 2.10க்கு அந்த வேலையை முடித்துவிட்டு திரும்பும் போது குத்தகைக்காரர் புர்ஜ் துபாய் பக்கம் போய் வரலா என்றார். அவர் சொல்லி முடிக்கும் முன்பே சரி என்றேன்.என்ன ஒரு 1 கி.மீட்டர் தள்ளி நிற்க வைத்து காண்பிப்பார் என்று பார்த்தால் அந்த கட்டிடத்துக்கு அருகிலேயே கொண்டுவிட்டு அதிசியப்படுத்திவிட்டார்.



கட்டுமானத்துறையில் ஆர்வம் உள்ளவர்கள் படத்தின் மீது சொடுக்கி பல விபரங்களை காணலாம்.வேலை செய்பவர்கள் எப்படி மேலே போகிறார்கள்,கட்டிடம் கட்டும் சாமான்கள் எப்படி மேலே போகின்றன் என்ற விபரங்கள் அருமையாக தெரியும்.

இந்த கட்டிடம் பைல் (PILE) எனப்படும் தாங்கும் தூண்களில் நிற்கிறது, அது 1500 விட்டம் என்றும் தரைக்கு கீழே சுமார் 45 மீட்டர் ஆழம் வரை தோண்டி போட்டுள்ளார்களாம்.167 மாடி வரை கான்கிரீட்டாலும் அதற்கு மேல் ஸ்டீலாலும் கட்டிடம் அமைந்திருப்பதாக சொன்னார்கள்.இப்போது ஸ்டீல் கட்டுமானம் நடந்துகொண்டிருக்கிறது.



அராப் டெக் மற்றும் சாம்சங் நிறுவனமும் கூட்டு சேர்ந்து கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.எம்மார் என்னும் நிறுவனம் தான் இந்த கட்டிடத்தின் உரிமையாளர்.

மறக்காமல் படத்தின் மீது சொடுக்கிப்பாருங்கள்.

Tuesday, November 18, 2008

பலூன் பறக்குது.

நேற்று சாயங்காலம் வேலை முடிய இருக்கும் நேரம் வெளியே நின்றுகொண்டிருக்கும் போது சூரிய அஸ்தமனம் அழகாக இருந்தது, அப்போது எடுத்த படங்கள் இது.கணினியில் போட்டு பார்க்கும் போது ஹீலியம் அடைக்கப்பட்ட பலூனா அல்லது ஹாட் ஏர் பலுனா என்று தெரியவில்லை,நகரப்பகுதியை சுற்றி வருவதை காண முடிந்தது.இந்த சேவை பொது மக்களுக்கு இருக்கிறதா என்று தெரியவில்லை.

இப்போதைக்கு படத்தை மட்டும் பார்த்துவையுங்கள்.









Monday, November 17, 2008

முதல் துளி

துபாயில் எப்பவாவது தான் மழை பெய்யும் என்று கேள்விப்பட்டிருந்தேன்,நேற்று தான் அந்த முதல் நாள் போலும்.கொஞ்ச நாட்களாகவே காற்றின் குளுமை மாலை சூரியன் விழும் போதே தெரிய ஆரம்பித்துவிட்டது.

வேலை செய்யும் இடத்தில் வெய்யில் நின்றால் ஒரு வித வெப்பமும் சட்டென்று நிழலில் நின்றால் சடாரென்று குளுமையாவது வினோதமாக இருக்கு.

மழை பெய்யும் போது நான் தூங்கியிருந்தாலும் சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீரையும் இப்படி கார் மீது நிற்கும் தண்ணீரும் காட்டிக்கொடுத்துவிடும்.அதை நீங்களும் பார்த்து மகிழுங்கள்.

சக்கரத்து மூடிக்கு கூட இவ்வளவு பளபளப்பு வேண்டியிருக்கு!!



படத்தை பெரிதாக்கி பார்க்க அதன் மீது சொடுக்கவும்.

Tuesday, November 11, 2008

சோ!!

இந்த புத்தகம் கண்ணில் பட்டதும் இதை படிப்பதா அல்லது வேண்டாமா என்ற குழப்பத்துடன் இருந்தேன். தெரிந்த கதை ஏற்கனவே பல புத்தகங்களில் படித்தது நிறைய கதாகாலட்ஷேபத்தில் கேட்டதையே திரும்பவும் படிக்கனுமா என்ற நிலையில் பொழுது போக்குவதற்காக படித்தேன்.

தலைக்கு வைத்தால் நிச்சயம் தலைகாணி தேவைப்படாது என்பது போன்ற அளவு நிச்சயம் தூங்கத்தான் போகிறோம்(தூங்காம இருக்கத்தான் இந்த படிக்கும் வேலையே!!) என்று நினைத்தேன்.



படிக்கப்படிக்க ஒவ்வொரு பக்கமும் ஒரு சரித்திரமாக இருக்கு.புரிதல்கள் மற்றும் விளக்கங்களும் கணக்கிடமுடியாத காலகட்டத்தில் என்ன மாதிரி எண்ணங்கள் இருந்திருக்கின்றன என்று யோசிக்கும் போது வியக்காமல் இருக்கமுடியவில்லை.

ஆத்திகர்/நாத்திகர் என்ற பாகுபாடின்றி அனைவரும் ஒரு முறையாவது படித்து பயன்பெற வேண்டும்/சுயசோதனை செய்துகொள்ளவேண்டிய அவசியம்.

சோ, மொட்டை தலையன், சொட்டை தலையன்,பார்பன அடிவருடி என்ற எண்ணத்துடன் படித்தால் இழப்பு அவருக்கல்ல.

Thursday, November 06, 2008

துபாய் - வான்வெளி

முதல் படம்: வேலை முடிந்து வீட்டுக்கு கிளம்பும் நேரம் வெளியில் வந்தவுடன் இந்த வானக்கோலம் கண்ணில்பட்டது,பிடி செல்பேசி மூலம்.




அடுத்து இந்த ஹெலிக்காப்டர்,எதையோ தூக்கிட்டு போகுது.





இந்த படம் நேற்று எடுத்தது.கரமா பகுதிக்கு போகும் எடுத்தது.உலகின் உயரமான கோபுரம் தெரிகிறதா?

Sunday, November 02, 2008

கத்திப்பாரா அழகு.

கத்திப்பாரா பாலம் - அனைத்து கிளைகளும் திறக்கப்பட்ட பிறகு
(படங்கள் என் மனைவி எடுத்தது)




என்னையா இது பாலத்தை இவ்வளவு செலவு பண்ணி கட்டிவிட்டு பெயர் பலகையை இப்படியா வைப்பது அதுவும் புயல் வரும் சென்னையில்.சரியான அரைவேக்காட்டுத்தனமா தெரியுது.



என்ன தான் சொல்லுங்க,பார்ப்பதற்கு கொஞ்சம் அழகு கூடிய மாதிரி தான் இருக்கு.சாலை மார்க்கிங்கை அடிக்கடி போடுங்கப்பா!

மேம்பால பகுதியிலும் POT HOLES வராம இருக்கனும்.

Saturday, November 01, 2008

சத்வா

இது துபாயில் இப்போதைக்கு விலை குறைந்த வீடுகள் கிடைக்கும் இடங்களில் ஒன்று.சில நாட்களுக்கு முன்பு, என்னுடன் வேலை செய்யும் பிலிப்பினோகாரர் என்னை அங்கு கூட்டிக்கொண்டு போனார்.அங்குள்ள சில கடைத்தொகுதி வாசல்களில் பிட் நோட்டிஸ் ஒட்டியிருப்பார்கள் அதில் உள்ள எண்ணை அழைத்தால் விபரங்கள் கிடைக்கும் என்று சொன்னார்.

அங்கு இறங்கியவுடனே மாலை வெய்யிலில் ஷேக் சையட் சாலையில் நடக்கும் கட்டுமான வேலைகள் "பளிச்" என்று தெரிந்தது.வீடு தேடுவதை பிறகு பார்க்கலாம், உலகத்தில் இப்போதைக்கு உயரமான கட்டிடம் நன்றாக தெரிவதை படம் எடுக்கலாம் என்று சாலையில் மறுபக்கத்துக்கு போய் கீழுள்ள படத்தை எடுத்தேன்.....உங்களுக்காக.



இப்பகுதியில் நம்மவர்கள் பிலிபைன்ஸ் மக்கள் அதிகமாக வாழ்கிறார்கள்.ஒரு சிறிய அறை கிடைத்தால் அதிலும் தட்டி அடித்து பிரித்து மறுபகுதியை வாடைக்குவிட ஆசைப்படுகிறார்கள்.எவ்வளவுக்கு எவ்வளவு தங்கள் இருப்பிடத்தை சுருக்க முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு சுருக்கிக்கொள்கிறார்கள்.

மறுநாள் அந்த பிலிப்பினோ நண்பனிடம் ஒரு அறை வாடகை 4000 திராம் சொல்கிறார்கள் என்றேன்,அங்கு போய் அதில் தடுப்பு போட்டு,தடுப்பை வாடகைக்கு விட்டுவிடு என்று கூலாக சொன்னான்.

இவ்வளவு பக்கத்திலா?

ஹாங்காங் பழையவிமான நிலையத்தை அடையும் விமானங்கள் மிகவும் பிரம்மப்பிரயத்னத்துடன் அடைவதாக முன்பு எங்கோ படித்த ஞாபகம் அதோடு ஒரு நகரத்தின் மீது மிகவும் தாழ்வாக பறக்கிறது என்று ஒரு விமானத்தின் படத்தையும் போட்டு காட்டிருந்தார்கள்.

இங்கு வந்த நாட்கள் முழுவதும் விடிகாலையில் நான் தங்கியிருக்கும் வீட்டுக்கு அருகில் மிகுந்த சத்தத்துடன் இறங்கிக்கொண்டு இருக்கும்,அதுவும் சுமாராக 3 நிமிட இடைவெளியில்.மாலை வேளையில் காற்றின் திசையை பொருத்து மேலெழும்பும் அல்லது தரையிரங்கும்.சாலையில் நடப்போரும் மாலைவேளை காற்றை அனுபவிக்க வெளியில் இருப்போர்களும் அன்னாந்து பார்பது அவரவர் ஊர் போகும் நாளை ஏக்கத்துடன் விமானம் மூலம் பார்பதாக தோனும்.

இன்று காலை இந்த படம் எடுக்கும் போது வீட்டின் கூரைக்கும் விமானத்துக்கும் 50 மீட்டர் இடைவெளி தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.எதுவும் நடக்காத வரை சரி ஒரு விபத்து போதும் சில ஆயிரங்களை முழுங்க.

Tuesday, October 28, 2008

துரோணா

புத்தகத்தை பிரித்த உடனே தூக்கம் வரும் ஆசாமிகளா? நீங்கள் தாராளமாய் போய் தூங்கலாம் இந்த படத்தில் ஏனென்றால் படம் ஆரம்பிக்கும் போதே புத்தகத்தை பிரிக்கிறார்கள்.





ரமலான் விடுமுறையில் ஒரு நாள் படம் பார்க்கலாம் என்று ஜபதெலியில் உள்ள அரங்குக்கு போனோம்,உள்ளே நுழையும் முன்பு தமிழ் படமா? ஹிந்தி படமா என்று விவாதிக்கும் போது ஹிந்தி வென்றது.இங்குள்ள குடும்பங்களில் குழந்தைகள் பல ஹிந்தியை பள்ளியில் படிப்பதாலும்,ஹிந்தி சினிமா சேனல்கள் அதிகமாக தொலைக்காட்சியில் வருவதாலும் பலர் அதை விரும்புகின்றனர்.பெரும்பாலான மக்கள் அதை விரும்பும் போது சரி "ராமன் தேடிய சீதை" யை விட்டுக்கொடுத்தேன்.

மிகக்குறைவான கூட்டம் படத்தின் பிரபலத்தை படம் முடிந்தவுடன் தான் உணரமுடிந்தது.அபிசேக்பச்சன் & நடிகை பெயர் தெரியவில்லை கேட்டு தெரிந்துகொள்ளவேண்டும் ஆர்வமும் இல்லை.பல வருடங்களுக்கு பிறகு ஒரு இந்தி படம் பார்பதால் அர்த்தம் புரிந்துகொள்வதில் கஷ்டமாக இருந்தது.

படம் முடிந்த பிறகு உறவினர், ரித்திக்கு போட்டியாக அபிஷேக் இந்த படத்தில் ரித்திக் செய்திருந்து போல் செய்யமுயன்றிருக்கிறார் என்று சொன்னர்.இது குழந்தைகள் படம் முடிந்தால் குழந்தைகளை மட்டும் அனுப்பி பார்க்கவையுங்கள்.

Wednesday, October 22, 2008

மண் தோண்டும் பல்

மண் தோண்டுவதில் தான் மக்களுக்கு எவ்வளவு ஆர்வம்? அதற்கு ஈடுகொடுக்கும்மாறு தொழிற்துறையும் போட்டி போட்டுக்கொண்டு இயந்திரங்களை தயாரித்து தள்ளுகிறது.அந்த வரிசையில் கீழே உள்ள இயந்திரமும் ஒன்று.இதை இவ்வளவு சமீபத்தில் பார்த்ததில்லை என்பதால் கண்ணில் பட்டதும் உடனே சுட்டுவிட்டேன்.

இதன் பயன்பாடுகள் கட்டுமானத்துறையில் அதுவும் தரைக்கு கீழே வேலை என்றால் அதிகம்,அதை இப்போது சொன்னால் ஒரு பெரிய தொடராகிவிடும்,அதனால் பிறகு விரிவாக சொல்கிறேன்.






சும்மா, மண்ணை அப்படியே கரைச்சு சாப்பிடுவேன் என்று சொல்கிற மாதிரி இருக்கா?

Tuesday, October 21, 2008

போக்குவரத்து - துபாய்

போக்குவரத்து நெரிசலுக்கு இப்போதைக்கு பிரபமானாலும் ஷேக் சயித் சாலையில் 100 கி.மீ வேகத்துக்கு போகும் போது அருமையாகத்தான் இருக்கு.இந்த நெரிசல்கள் எல்லாம் இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளில் ஓரளவுக்கு முடிவுக்கு வரும் என்று நினைக்கிறேன். துபாய் அரசாங்கம் செய்யும் மெட்ரோ மற்றும் மேம்பாலங்கள் வேலை எல்லாம் துரிதமாக நடந்து வருகிறது.

இப்போது ஓரளவுக்கு நிலவியல் அறிவு வந்துவிட்டது என்று நினைக்கிறேன்.அவ்வப்போது சாலையில் தென்படும் (கீழே உள்ள படத்தில்) இட பலகைகளை பார்க்கும் போது,எதற்கு இரண்டு கலரில் பலகைகள் என்று யோசித்தேன்.



பிரவுன் பலகைகள் புதியவர்கள்/ஊரைச்சுற்றி பார்ப்பவர்கள் எளிதாக அடையாளம் கண்டுகொள்வதற்காக வைத்துள்ளார்களாம்.வித்தியாசமாக இருந்தது.இதே மாதிரி வழிகாட்டும் பலகைகள் அல் அய்ன் மற்றும் ஃபுஜிரா போகும் போதும் கண்ணில் பட்டது.
இப்படி வித்தியாசமாக வைத்திருந்தாலும் அனிச்சையாக எந்த பலகையை பார்பது என்பது தெரியாமல் வாகன வேகத்தில் தடுமாறுவது இயற்கையாக நடந்தது.

Sunday, October 19, 2008

துபாய் - சில படங்கள்

அவ்வப்போது செல்லும் இடங்களில் பிடித்தமான காட்சியாக அமைந்தால் செல்பேசியில் சுட்டு வைப்பேன்,அதில் சில...

பலவிதமான பேரிச்சம்பழங்கள்.


நீ என்ன பெரிய பிஸ்தாவா? நம்மூரில் விலை அதிகமா? இங்கு போட்டிருக்கும் விலையோட 13.30 ஆல் பெருக்கி பார்த்துக்கொள்ளுங்கள்.


இது ஒரு கடைத்தொகுதியின் உள்ளே (ஜினெட்)

படத்தின் மீது சொடுக்கினால் பெரிதாக தெரியும்.

Saturday, October 18, 2008

ஐயின் மிருககாட்சிச் சாலை

ரமலான் பெருவிழா காலத்தில் சில நாட்கள் தொடர்ந்தார்போல் விடுமுறை வந்தது அதை உள்ளூரில் இருக்கும் பலர் வண்டியை எடுத்துக்கொண்டு 300~400 கி.மீட்டர் என்று பக்கத்து ஊருக்கு போய் வருவார்கள்.அதே மாதிரி என் உறவினர்கள் என்னையும் அவர்கள் குடும்பத்துடன் ஓமன் போய் வரலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தார்கள்.நான் இங்கு வந்து ஒரு வாரம் ஆன நிலையில் என்னிடம் இருப்பது வெறும் விசிட் விசா என்பதால் இங்கிருந்து போய் திரும்புவதில் பிரச்சனை இருக்கும் என்றார்கள்,அதற்குப் பதிலாக குழந்தைகளின் விருப்பப்படி அல் அயினில் இருக்கும் மிருககாட்சி சாலைக்கு போகலாம் என்று முடிவெடுத்து பாலைவனத்தை திரும்பவும் கடக்க ஆரம்பித்தோம்.



எங்கிருக்குது இந்த இடம்? கீழே உள்ள படத்தை பாருங்கள்



மறுபடியும் நீண்ட நெடும் சாலை எங்கு பார்த்தாலும் மணல் மற்றும் அங்கும் இங்குமாக வீடுகள்.

2 மணி நேரப்பயணம் சுகமாக இருந்தது.மொத்தமாக மணலாக இல்லாமல் ஒரு பகுதிக்கு மேல் சாலை இருபுறமும் புதர் போன்ற சில மரங்கள் தெண்பட்டன.

இது தான் முகப்பு பகுதி.



வாசலில் உள்ள பெயர் பலகை




மிருகக்காட்சி சாலையின் உள்ளே...









இது முடிந்து பக்கத்தில் உள்ள தீம் பார்கையும் ஒரு ரவுண்டு விட்டுவிட்டு வீடு திரும்பினோம்.
இங்கு மகிழுந்து மட்டும் இல்லை என்றால் ஒரு இடமும் போகமுடியாது.பொது போக்குவரத்து நகரத்துக்கு உள்ளே மாத்திரமே உண்டு.

Thursday, October 16, 2008

முதல் பனி

இன்று காலை வீட்டை வெளியில் வந்த உடனேயே ஒரே புகைமூட்டமாக இருக்குதே என்று பார்த்தால் "பனி".காலை மெது நடைக்கு உகந்தாக இருக்கும் என்று நினைத்தால்...நடந்த 10 நிமிடங்களுக்குள் வேர்க்க ஆரம்பித்துவிடுகிறது.10 நிமிடங்களுகுள் பனி இறங்கி சுத்தமாக மறைந்துவிடுகிறது.



கால நிலை மாற இந்த பனி ஒரு அறிகுறி போல் இருக்கு,அனுபவிப்போம் இதையும்.

Wednesday, October 15, 2008

துபாய் பற்றி தெரிந்துகொள்ளனுமா?

எதேச்சையாக கண்ணில் பட்ட இந்த ஆங்கில வலைப்பூ துபாயைப் பற்றி நிறைய தகவல்களை கொடுக்கிறது.

துபாய் வருவதற்கு ஆசைப்படுபவர்கள் இதை படிக்கலாம்.

இங்கு சொடுக்கவும்.

Tuesday, October 14, 2008

ஓட்டுனர் உரிமம்-துபாயில்

இங்கு வந்த நாள் முதலாக காலை என் உறவினர் என்னை வேலையிடத்தில் விட்டுவிட்டு செல்வார்,என்னதான் அவர் போகும் வழி என்றாலும் ஒவ்வொரு நாளும் அவருடன் வண்டியில் வரும் போது எனக்காக சீக்கிரம் கிளம்புவதும் அவர் மணைவியை அலுவலகத்தில் விடுவதுவும் பாதிக்கப்படுகிறதோ என்ற உள்ளுணர்வு சொல்லிக்கொண்டு இருக்கிறது.

சரியான பேருந்தோ அல்லது விரைவான சேவையில்லாததால் நானும் பல விதங்களில் வீட்டில் இருந்து வேலைக்கு வர முயற்சித்து இன்றுவரை தோல்வி தான் அடைந்துள்ளேன்.

காலை 7 மணிக்கு வீட்டிவிட்டு கிளம்பி பஸ் நிறுத்தத்துக்கு வந்தால் நான் போக வேண்டிய பஸ் எப்போது வரும் என்று சொல்லமுடியாத நிலை, வந்தாலும் ஏறுவதற்கு முடியுமா? என்று சொல்லமுடியாது.இப்படிப்பட்ட நிலையில் வாகன ஓட்டுனர் உரிமம் எடுத்துவைத்துக்கொண்டால் நல்லது என்று நினைத்துக்கொண்டிருக்கேன் அதைப் பற்றி அவ்வப்போது பலரிடம் பேசி அறிந்துவைத்திருந்தாலும் நேற்று இரவு லுலு கடைத்தொகுதிக்கு போன போது அங்கு இதற்கென்று ஒரு சின்ன அடைப்பு ஏற்படுத்தி அவர்களின் விபரங்களும் ஓட்டுனர் உரிமம் வாங்க எவ்வளவு செலவாகும் என்றும் போட்டிருந்தார்கள்...பார்த்துவையுங்கள்.

Student File = 20
Eye Test = 30
Learning Permit = 40
Admission Fee =200
LMV =1300 (for 20 lessons)
Assessment Test =100
Prelim. Lecture = 70
Road Test = 100
Signal Lecture = 70
Parking Test = 70
Cert&Ser.Charges = 100
LMV-4 lecture = 500
License Issue = 110
LMV issue Test = 70

Total = 2780 திராம்.

இது குறைந்த பட்சம்,உங்கள் திறமை அதிர்ஷ்டத்தை பொருத்து மாறும்.

இப்படி வாங்கும் உரிமம் 1 வருடத்துக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்பது கூடுதல் தகவல்.
முடியுமா? எனபதை விட தேவையா என்பதே இப்போது தொக்கி நிற்கிறது.

Sunday, October 12, 2008

தமிழ் மேல் எவ்வளவு ஆசை!!!

இங்கு (துபாயில்) நான் தங்கியிருக்கும் இடத்துக்கு பக்கத்தில் "வீடு காலி"- விபரங்களை ஒட்ட ஒரு இடத்தை ஒதுக்கியுள்ளார்கள்,அதில் இப்படி ஒரு துண்டுப்பிரசுரம்.

என்ன ஆசை இவருக்கு தமிழ் மீது!! சரியான குசும்பனாக இருப்பார் போலும். :-)

சந்திரன் மேற்பரப்பு?

கீழே உள்ள படம் என்ன சந்திரன் மேற்பரப்பு மாதிரி இருக்கா?

அது தான் இல்லை,இங்கு உள்ள மணலின் மீது தண்ணீர் விட்டுவிட்டு மறு நாள் காலை வந்து பார்க்கும் போது இப்படி அழகாக மண் கொப்பளித்து இருந்தது.இதை பார்க்கும் போது ஏதோ மனிதன் நடமாடாத கிரகத்தின் மேற்பரப்பு போல் தோன்றியது.



படத்தின் மீது சொடுக்கிப் பாருங்கள் அதன் அருமை தெரியும்.

கி.மீட்டர் உயரமான கட்டிடம்

ஆடுதுறை என்ற பதிவர் இதைப் பற்றி சில நாட்களுக்கு முன்பு ஒரு பதிவு போட்டிருந்தார்.
படத்தை பாருங்கள்...1 கி.மீட்டர் உயரத்துக்கு ஒரு கட்டிடம் கட்டப்போகிறார்களாம் அதைச் சுற்றி 70,90 மாடி என்று மேலும் பலவிதமான கட்டிடங்களும் வரப்போகிறதாம்.

என்னைப்பொருத்த வரை...இது தேவையில்லாத உயரம் என்று தோன்றுகிறது,இங்கு நிலத்தேவை கட்டுப்பாடு அவ்வளவாக இல்லாத இடத்தில் அளவுக்கு அதிமான் உயரம் போவது வெறும் உலகச்சாதனை என்ற பெயர் மட்டுமே தாங்கி நிற்க உதவும்.



வான்வெளியிலும் கால்பதிக்கப்போவதாக இன்று செய்தித்தாளில் ஒரு செய்தி படித்தேன்,ஒருவேளை ராக்கேட் ஏவுவதற்கு இந்த கட்டிடம் உதவியாக இருக்குமோ என்னவோ? :-)


படங்கள்: உதவி கலீஜ் டைம்ஸ்

Saturday, October 11, 2008

கோர்பகான் கடற்கரை

மற்ற பெரும்பாலான தேசங்களுக்கு ஞாயிறு விடுமுறை என்றால் இங்கு வெள்ளி விடுமுறை.முதல் வெள்ளிக்கிழமையை எப்படி கொண்டாடுவது என்று பேச்சு நடக்கும் போது வீட்டு குழந்தைகள் ஏதோ பெயர் சொன்னார்கள்,ஒன்றும் விளங்கவில்லை.புதிய தேசத்தில் தலை நுழைத்து அங்கு உள்ளவர்கள் பேசும் போது கண்ணை கட்டி காட்டில் விட்டமாதிரி இருக்குமே அப்படி இருந்தது அப்போது.எங்கு போனாலும் சரி என்றேன்.அவர்கள் பேசும் போது ஃபுஜூரா என்ற பெயர் மட்டுமே கேட்ட மாதிரி இருந்தது. மதியம் சுமார் 2 மணிக்கு கிளம்பினோம்.பாலைவன பகுதியில் அருமையான சாலையின் மேல் வண்டி போக ஆரம்பித்தது.இந்த சாலையை எமிரேட் சாலை என்றார்கள்.எல்லா எமிரேட் சாலைகளையும் இணைப்பதால் அந்த பெயர் வந்திருக்கும் போல் இருக்கு.

கீழே உள்ள வரைப் படத்தை பாருங்கள்.



சுமார் 190 கி.மீட்டர் பயணம்,வண்டி எப்போதும் 100~120 கி.மீட்டரில் ஓடிக்கொண்டிருந்தது.இது தான் அந்த சாலையின் வேகக் கட்டுப்பாடு.சீரான நேர் சாலை.



கொஞ்ச தூரம் வந்த பிறகு மலைகள் தென்பட ஆரம்பித்தன இதன் கற்கள் பாளம் பாளமாக இருந்தது.எளிதாக உடைத்துவிடலாம் போல் தோனியது.பாலைவன மத்தியில் இந்த மலைகளால் அந்த இடம் கொஞ்சம் குளுமையாக இருப்பதாக தோனியது.







இன்று வரை மணல் கலந்த காற்று வீசிக்கொண்டு இருக்கிறது இதனால் அந்த மலைகளின் மேல் மணல் துகள்கள் படிவுகளை காணமுடிகிறது.

ஒரு வழியாக மாலை 4.15க்கு கடற்கரையை வந்து சேர்ந்தோம்,அவ்வளவாக கூட்டம் இல்லை.சில சேட்டன்மார்கள் மட்டும் கழுத்தளவு ஆழத்தில் நின்றுகொண்டு பந்து விளயாட்டு விளையாடிக்கொண்டிருந்தார்கள்.






ஒரு பக்கம் மலை மறு பக்கம் போர்ட் இதற்கிடையில் தண்ணீர், அலைகூட இல்லாமல் குளம் மாதிரி அமைதியாக இருந்தது.குளிப்பதற்கு பயமில்லாமல் குளிக்ககூடிய கடல் இது.அங்கு ஒரு படகை வைத்து ஒருவருக்கு 6 திராம் என்ற கட்டணத்தில் கடலில் கொஞ்ச தூரம் சென்று திருப்பி கொண்டுவிடுகிறார்கள்.ஒரு பங்களாதெஷி தான் ஓட்டுனர்.சுகமாக இருந்தது.

மாலை ஆறு மணிவரை தண்ணீரில் இருந்துவிட்டு பிறகு அங்கிருக்கும் ஒரு கடையில் பர்கரும் ஒரு குளிர்பானமும் சாப்பிட்டு விட்டு கிளம்பினோம்.பர்கர் சாப்பிடுவதற்கு முன்பு ஒரு சோகமாகி போகவேண்டிய நிகழ்ச்சி- தப்பித்தது 4 வயது பெண் குழந்தை.பெரியவர்கள் நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போது அந்த குட்டிப்பெண் தன் அண்ணனை தேடி சாலை குறுக்கே போய் முதல் லேனில் நிற்க எதிரே வேகமான கார்-ஹாரனுடன்,நல்ல வேளை குழந்தை காரை நோக்கி ஓடாமல் நான் கத்தியதை பார்த்து என்னை திரும்பிப்பார்க்க...உடனே ஓடி அப்படியே அலேக்காக தூக்கி மறுபக்கம் வந்துவிட்டேன்.அவளின் பக்கத்தில் நான் இருந்ததால் செய்யமுடிந்தது.அவளின் அப்பா அப்படியே சிலையாகி என்னசெய்வது என்று தெரியாமல் உறைந்து போனார்.நம்மில் பலர் இந்த மாதிரி சம்யங்களில் எல்லாம் உறைந்து போவதை பல முறை நானே அனுபவித்திருக்கேன்.மூளை சொல்லும் வேகத்தில் நம்மால் செயல்படமுடிவதில்லயா? யோசிக்க வேண்டிய விஷயம்.

மறுபடியும் நீண்ட சாலைகள் வழி நெடுக மின்விளக்குகள், வாகனம் ஓட்ட பிரச்சனையே இருக்காது என்று நினைத்தால் தவறாக முடிய பல சான்ஸ் கொட்டிக்கிடக்கிறது.

பாதிவழியில் சித்தப்பா பையனுக்கு கொஞ்சம் மூடு அதிகமாகிவிட்டது போலும்,வண்டின் வேகத்தை 120,130,140,150,160.........165 என்று ஓட்டிக்காண்பித்தான். வண்டி 165 யில் ஓடிக்கொண்டிருக்கும் போது "பளிச்" என்று ஒரு மின்னல்.

இங்கு ரேடார் என்று சொல்லக்கூடிய வேகக்கட்டுப்பாட்டை மீறும் வண்டிகளை பிடிக்க நிறுவியிருக்கும் கேமிரா தன் பணியை செய்திருக்கும் போல் இருக்கு.இதுவரை அங்கிருந்து கடிதம் வரவில்லை என நினைக்கிறேன்.என்ன மூனு பாயின்ட் மற்றும் கட்டணம் கட்டவேண்டியிருக்கும்.

அவரின் தங்கமணிக்கு பயங்கர கோபம், மீதி பயணம் முழுவதும் அசாத்திய மௌனமாக கழிந்து வீடு திரும்பிய போது நள்ளிரவையும் கடந்திருந்தது.