Tuesday, October 28, 2008

துரோணா

புத்தகத்தை பிரித்த உடனே தூக்கம் வரும் ஆசாமிகளா? நீங்கள் தாராளமாய் போய் தூங்கலாம் இந்த படத்தில் ஏனென்றால் படம் ஆரம்பிக்கும் போதே புத்தகத்தை பிரிக்கிறார்கள்.





ரமலான் விடுமுறையில் ஒரு நாள் படம் பார்க்கலாம் என்று ஜபதெலியில் உள்ள அரங்குக்கு போனோம்,உள்ளே நுழையும் முன்பு தமிழ் படமா? ஹிந்தி படமா என்று விவாதிக்கும் போது ஹிந்தி வென்றது.இங்குள்ள குடும்பங்களில் குழந்தைகள் பல ஹிந்தியை பள்ளியில் படிப்பதாலும்,ஹிந்தி சினிமா சேனல்கள் அதிகமாக தொலைக்காட்சியில் வருவதாலும் பலர் அதை விரும்புகின்றனர்.பெரும்பாலான மக்கள் அதை விரும்பும் போது சரி "ராமன் தேடிய சீதை" யை விட்டுக்கொடுத்தேன்.

மிகக்குறைவான கூட்டம் படத்தின் பிரபலத்தை படம் முடிந்தவுடன் தான் உணரமுடிந்தது.அபிசேக்பச்சன் & நடிகை பெயர் தெரியவில்லை கேட்டு தெரிந்துகொள்ளவேண்டும் ஆர்வமும் இல்லை.பல வருடங்களுக்கு பிறகு ஒரு இந்தி படம் பார்பதால் அர்த்தம் புரிந்துகொள்வதில் கஷ்டமாக இருந்தது.

படம் முடிந்த பிறகு உறவினர், ரித்திக்கு போட்டியாக அபிஷேக் இந்த படத்தில் ரித்திக் செய்திருந்து போல் செய்யமுயன்றிருக்கிறார் என்று சொன்னர்.இது குழந்தைகள் படம் முடிந்தால் குழந்தைகளை மட்டும் அனுப்பி பார்க்கவையுங்கள்.

No comments: