அலுவலகத்தில் செம வேலை,என்ன பண்ணுவது என்று தெரியாமல் இருந்த நேரத்தில் போன வாரம் ஒருவர் பதிவில் தேவனை பற்றி சொல்லியிருந்தார்.அதை படித்தவுடன் வந்துவிட்டது தேவன் ஜுரம்.
ஓடு,பக்கத்தில் உள்ள நூலகத்துக்கு.
DEV - என்ற பகுதியில் ஒரு 10 புத்தகங்கள் இருந்தது,பல அழுக்காக இருந்தது.பலர் படித்துப்போட்டதால் போலும்.ஒரு நாளைக்கு ஒன்று என்று முடிவெடுத்து படிக்க ஆரம்பித்தேன்.பல இடங்களில் சிரிப்பை அடக்க படாதபாடு படவேண்டியிருந்ததை சொல்லவும் வேண்டுமா?
இவரின் கதைகளை படிக்கும் போது,எப்படி இவரால் 1957 வருடங்களில் இந்த மாதிரி கதைகளை எழுதமுடிந்தது என்று உள்ளுக்குள்ளே எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கும்.இவர் வாழ்ந்ததே வெறும் 44 வருடங்கள் தானாம்.44 யெல்லாம் வயதா?

போன வாரம் படித்த சில நூட்கள்.


இந்த மாதிரியெல்லாம் எழுதினா,அலுவலகத்தில் படிக்கமுடியுமா?

வாங்க இ.கொத்தனார்,உங்களுக்காகவே இந்த பதிவு.உங்களை மாதிரியே இவரும் சந்துல சிந்து பாடியிருக்கார்.:-)))அவர் எழுதிய ஒரு கதை; ஒருவர் தட்டச்சு இயந்திரம் வாங்கி அதன் மூலம் அதன் கஷ்டங்களை சொல்லியிருப்பது,வயிறு வலி இருப்பவர்கள் படிப்பது உசிதம்.