Friday, December 01, 2006

அப்பாடி!!

வீடு பார்த்த மறுநாள் மாலை 7 மணிக்கு என் வீட்டுக்கு வந்து முறையான ஒப்பந்தம் போட்டுக்கொள்ளலாம் என்று என் முகவர் கூறியிருந்தார்.இந்த ஒப்பந்தம் எனக்கும் வீடு வாங்குபவருக்கும் இடையே உள்ளது.

இப்படி ஒப்பந்தம் போடுவதற்கென்றே சில விதிமுறைகள் உள்ளது.அவற்றில் சில வற்றை பார்ப்போம்.

இந்த ஒப்பந்தத்துக்கு "Option to Purchase"என்று பேர்.வீடு வாங்குவது என்று முடிவெடுத்த பிறகு வாங்குபவர் ஒரு தொகை கொடுத்து முன் பதிவு செய்து கொள்வது போல்.இதனால் மற்றொருவர் வந்து நான் இன்னும் அதிகமாக கொடுக்கிறேன் என்றாலும் ஒத்துக்கொள்ளமுடியாது.

படம் கீழே.

Photobucket - Video and Image Hosting


என்னுடைய வீடு ஏற்கனவே மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதால் வீடு வாங்கப்போகிற விலை தோராயமாக தெரியும் அப்படியில்லாவிட்டால்,மதிப்பீடு வந்த பிறகு தான் இதை வீவக யிடம் கொடுக்கமுடியும்.

எங்களுடைய முகவர்கள் அவரவருக்கு வேண்டிய விவரங்களை சொல்லியபிறகு, வீடு விற்கும் விலையை போடும் போது வாங்குபவர் "நான் ஏற்கனவே செய்யப்பட்ட மதிப்பீடு காலாவதியாகிவிட்டதால்,நான் ஒத்துக்கொள்ளமுடியாது" என்றார்.

புது தலைவலியா? என்று நினைத்துக்கொண்டேன்.

அப்படியென்றால் புதிதாக மதிப்பீடு செய்ய விண்ணப்பம் செய்யவேண்டும்,அதற்குப்பிறகு வந்து மதிப்பீடு செய்து எல்லாம் முடிவதற்கு மேலும் 1~2 மாதங்கள் ஆகலாம்.

வேறு வழி தெரியாததால் ஒத்துக்கொண்டேன்.

மேல் சொன்ன பேப்பரில் கையெழுத்து போட்டபிறகு அவர்கள் சென்றபிறகு நானும் எனது முகவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.அப்போது நான் சொன்னேன்.அவர்கள் தவறாக மறுமதிப்பீடு கேட்கிறார்கள்,ஏற்கனவே வந்த மதிப்பீடை விட அதிகமாகப்போகிறது என்றேன்.இது ஒரு மாதிரியான சூதாட்ட விளையாட்டு தான்.மதிப்பீட்டாளர்கள் பலர் இருப்பதால் அவரவர் கண்ணோட்டத்தில் விலை மதிப்பிடுவார்கள்.அதனால் சில சமயம் ஏறும் / இறங்கும். என் பேச்சை என் முகவரும் ஒத்துக்கொள்ளவில்லை.ஏற்கனவே செய்யப்பட்டதை விட குறையும் என்றார்.

மறுபடி மதிப்பீடு வந்தது.

நான் முதலில் கேட்ட வீட்டின் விலைக்கு மேல் 2K என்பதை யாரோ ஞாபகம் வைத்துக்கொண்டு 162K க்கு மறுமதிப்பீட்டு போட்டு வந்தது.அனாமத்தாக 2K வந்ததில் கொஞ்சம் சந்தோஷம் தான்.

இது நடந்துகொண்டிருக்கும் போது எனது முகவர் கூப்பிட்டு,என்னுடைய முகவர் பணிக்கு உண்டான தொகைக்கும் ஒரு ஒப்பந்தம் போட்டுவிடலாம்,இருவருக்கும் பிரச்சனை இருக்காது என்றார்.

நல்லது ஆனால் என்னால் 2% கொடுக்கமுடியாது.வீடு விற்பதில் நான் லாபம் பார்க்கவில்லை அதனால் என்னால் S$2500 தான் கொடுக்கமுடியும் என்றேன்.எனக்கு நன்றாக தெரியும்,வீட்டு விற்பனை இந்த அளவுக்கு வந்த பிறகு எந்த முகவரும் கிடைப்பதுவரை லாபம் என்ற நோக்கில் தான் இருப்பார்கள் என்பதால் அவ்வாறு சொன்னேன்.முதலில் இருந்தே இந்த முகவரின் சேவை அவ்வளவு தரமாக இல்லாததாலும் சில நூறு வெள்ளியை இழந்திருந்தாலும் அவரிடம் பேரம் பேசினேன்.

அதென்ன கணக்கு 2500?

வீடு விற்பது 162K, முறையாக கொடுக்கவேண்டிய 2% வெள்ளி 3140 வருகிறது.முதல் தடவை மதிப்பீடு செய்து அதற்குள் வாங்குபவரை பிடிக்காததால் எனக்கு இழப்பு சுமார் 180 வெள்ளி,அதையும் அவர் தலையில் கட்டினேன்.இணையத்தில் பார்க்கும் போது பலரும் 1.5% கொடுக்கிறார்கள் என்று தெரிந்துகொண்டு 2500 வெள்ளி என்றேன்.3000 க கொடுங்கள் என்றார் முகவர்.

முடியாது என்று சொன்னதால் வேறு வழியின்று ஒத்துக்கொண்டார்.ஒப்பந்தம் போடும் போது 5% GST-பொருள் சேவை வரி தனியாக கொடுக்கவேண்டும் என்றார்.(பாருங்கள் எங்கெங்கு சுரண்டமுடியுமோ அங்கெங்கு சுரண்டிப்பார்கிறார்கள்)அதற்கும் முடியாது என்றேன்.நான் பேசியது மொத்த தொகை அதுவும் நமது கடைசி Appointment முடிந்த கையோடு கொடுத்துவிடுவேன் என்றேன்.

ஒத்துக்கொண்டார்.அவருக்கும் வேறு வழியில்லை.வந்த வரை லாபம் தானே.

இது நடந்த பிறகு ஒரு வழியாக "வீவக" விடம் எங்களது விண்ணப்பம் போய் அதை அவர்கள் சோதித்துவிட்டு அக்டோபர் 12ம் தேதி முதல் அப்பாயின்மென்ட் வைத்துக்கொள்ளலாம் என்று முடிவுசெய்து அன்று போய் அந்த வேலையை முடித்தோம்.அன்றே கடைசி அப்பாயின்மென்ட்க்கும் தேதி குறித்துவிடலாம்.

வீவக அதிகாரி கேட்டவுடன்,வாங்குபவர்களிடம் கலந்தாலோசித்து நவம்பர் 16 என்று முடிவுசெய்துவிட்டோம்.வீடு கையை விட்டு போனால் சரி என்பதால் எனக்கென்று எந்த வித கட்டுப்பாடு இல்லாமல் சரி என்று சொன்னேன்.

ஒரு வழியாக நவம்பர் 16ம் தேதி கட்டுப்பாடில்லாமல் சுதந்திரமனிதனாக ஆனேன்.

இழந்தது எவ்வளவு?
கீழே பார்த்து நீங்களே கணக்கு போட்டுக்குங்க!
:-))

Photobucket - Video and Image Hosting
Photobucket - Video and Image Hosting

இனி தங்குவதற்கு வாடகை வீடு பார்க்கவேண்டும்.இதில் பார்த்த வீடுகளும் அதன் அனுபவங்களும் தொடரும்.

No comments: