Monday, December 11, 2006

வாடகை அறை (1)

வரும் இரு பதிவுகளில் சிங்கையில் வாடகை அறை எடுக்க நான் பட்ட அனுபவங்களை படிக்கலாம்.

வீடு விற்பனை முடியும் முன்பே அடுத்து தங்குவதற்கு அறை பார்க்க ஆரம்பித்தேன்.சில நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் சொல்லி ஏதாவது கேள்விப்பட்டால் சொல்லுங்கள் என்றேன்.

அதே சமயத்தில் இங்கு வரும் தமிழ் பத்திரிக்கையில்(தமிழ் முரசு) வரும் வரிவிளம்பரங்களில் பிடித்த பெயர் உள்ள சிலரை தொடர்புகொண்டு விபரங்களை சொன்னேன்.சிலர் "Yee Tee" யா அது எங்க இருக்கு? என்று கிசு கிசு மூட்டினார்கள்.

அதோடில்லாமல் இணையத்தில் துழாவிக்கொண்டிருந்த போது கிடைத்தவர்களிடமும் சொன்னேன்.

தோராயமாக இவர்கள் எப்படி செய்கிறார்கள் என்று பார்ப்போம்.
முதலில் நீங்கள் என்ன அனுமதியில் இங்கு இருக்கிறீர்கள் என்று கேட்பார்கள்,தாவது work permit or permanent Residence என்று.

நமது பெயரை வைத்து அதற்கு தகுந்தார் போல் உள்ள வீட்டை பார்ப்பார்கள்.பிற சமூகத்துடன் போய் வாழும் போது காலாச்சார முறையில் சில கஷ்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதால் வீட்டின் முதலாளிகளும் வாடகைதாரர்களும் அவரவர் சமூகத்திலியே அறை பார்ப்பார்கள்.

அறையில் எவ்வளவு பேர் தங்குவீர்கள்,குளிர்சாதனம் வேண்டுமா?(என்னை பொறுத்தவரை,சிங்கையில் குளிர்சாதனத்துக்கு அவசியம் இல்லை.)
சமைப்பீர்களா,எவ்வளவு முறை சமைப்பீர்கள் போன்ற கேள்விகள் வரும்.சாப்பாட்டுக்கடைகள் பக்கத்தில் உள்ளதா?

MRT எனப்படும் ரயில் சேவை பக்கத்தில் உள்ளதா? என்று பார்க்கப்படும் சிங்கையில் ரயில் மற்றும் பஸ் சேவைகள் முடிந்த அளவில் பக்கத்திலேயே இருக்கும். MRT பக்கத்தில் வீடு இருந்தால் நல்லதா / கெட்டதா? அதை கடைசியில் சொல்கிறேன்.

தமிழ்முரசு பத்திரிக்கையில் இருந்து கிடைத்த எந்த முகவரும் அவர்கள் கூட வந்து வீட்டை காண்பிக்கவில்லை.போனில் கூப்பிட்டு அங்கு போய் பாருங்கள்,இங்கே போய் பாருங்கள், பிடித்தால் சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டார்கள்.ஏதோ ஒரு வீடு பிடித்திருந்தால் அவர் நமக்காக ஒரு ஒப்பந்தம் போடுவார்கள்,பிறகு அரை மாத கமிஷன் வாங்கிக்கொண்டு போய்விடுவார்.வாடிக்கையாளர் நலம் ஜீரோ.

இப்படிப்பட்ட நேரத்தில் ஒரு தமிழ் முகவர் கூப்பிட்டு ஒரு வீட்டில் காலி அறை இருக்கிறது என்றார்.வீட்டின் ஓனர் நம்பர் கொடுக்க முடியுமா என்று கேட்டதற்கு,முடியாது என்றார்.

முதல் விசிட்: முகவர் கூப்பிட்டு யூடியில் (Yew Tee) ஓரறை காலியாக இருக்கிறது ஞாயிறு இரவு 8.30 மணிக்கு போய் பாருங்கள் என்றார்.சுமார் 8.20 க்கு அந்த வீட்டின் முன் நின்று கொண்டு கதவை தட்டினேன்,அழைப்பானை அழுத்தினேன்.அழைப்பான் சத்தம் காதில் விழுத்த மாதிரி தெரியவில்லை.சுமார் 5 நிமிடங்கள் சென்றதும் அங்கே இருக்க விருப்பம் இல்லாமல் கீழே வந்து முகவருக்கு போன் போட்டு விபரம் சொன்னேன்.அவரும் வீட்டுக்காரருக்கு போன் போட்டு விஜாரித்துவிட்டு திரும்ப அழைப்பதாக சொன்னார்.நேரம் கடந்ததே தவிர அழைப்பு வரவில்லை.வெறுப்புடன் வீடு திரும்பலாம் என்று மின்வண்டி ஏறியவுடன் முகவரிடம் இருந்து அழைப்பு வந்தது.அவர்கள் வீட்டில் தான் இருப்பதாகவும்,அழைப்பான் சத்தம் கேட்கவில்லை என்றும் சொன்னதாக சொன்னார்.

சரி,ஏதோ தவறு என்று நினைத்து மறுநாள் மாலை 6.30 மணிக்கு முன் ஒப்பந்தம் செய்துகொண்டு செல்லலாம் என்றிருந்தேன்.அதற்கிடையில் அந்த வீட்டின் முதலாளியே அழைத்து இன்று உங்களுக்காக வீட்டில் காத்திருக்கிறேன் என்றார்.

2வது முறையாக அந்த வீட்டின் முன்பு,அதே மாதிரி அழைப்பான் அழுத்தல்,கதவை தட்டுதல் நடந்துகொண்டிருக்க யாரும் வரவில்லை திறக்கவில்லை மாறாக நாய் ஒன்று குலைக்கும் சத்தம் மாத்திரம் கேட்டுக்கொண்டிருந்தது.

ஏமாற்றம் இரண்டாவது முறையாக. I dumb that agent.

இன்னொரு முகவர்:தமிழில் பேசும் முதிய பெண்மணி.இவரும் வீட்டின் விலாசத்தை சொல்வதோடு சரி.கூட வருவதில்லை.இங்கேயும் விடு ஜூட்.

இணையத்தில் கிடைத்த முகவர்: திரு பீட்டர், அழைத்து காதீப் (இடத்தின் பெயர்) யில் ஒரு அறை வாடைகைக்கு உள்ளது பார்கலாமா? என்று கூப்பிட்டு அழைத்துப்போனார்.

மிகப்பெரிய வீடு ஆனால் மஹா மோசமாக பராமரிக்கப்பட்டிருந்தது.அவர் காட்டிய அறையில் ஒரே ஒரு Wardrope தவிர வேறு எதுவும் இல்லை.வாடகை 275 வெள்ளி என்றார்.அறையும் மிகவும் சிறியதாக இருந்தது.சமைக்க அனுமதி தந்தார்.வீட்டின் மற்றொரு அறையை வாடகைக்கு விட்டிருந்தார்.நாங்கள் போன போது சிகரெட் புகையும் ஹாலில் தீர்த்தவாரிக்கு தேவைப்படும் சாமான்கள் தயாராக இருந்தன.தண்ணீர் அருந்துவது என்பது என்னை அவ்வளவாக பாதிக்கப்போவதால் நான் கவலைப்படவில்லை,ஆனால் சிகரெட்?

அப்போதே முடிவெடுத்துவிட்டேன் இது வேண்டாம் என்று,இருந்தாலும் முகவரிடம் இதை கடைசி Option க வைத்துக்கொள்ளலாம் என்றேன்.

அடுத்து செம்பவாங் என்னும் இடத்தில் உள்ள ஒரறை பார்க்கபோனோம்.வீடு சூப்பராக இருந்தது.அறையின் உள்ளே எதுவும் இல்லை.light Cooking செய்யலாம் என்றார். எதிர் பக்கம் உள்ள அறையில் இன்னொரு தம்பதிகள் வாடகைக்கு இருக்கிறார்கள் என்றார்.குளியல் அறை,சமையல் அறைக்கு பக்கத்திலேயே இருந்தது.எனக்கு தேவையான தொலைபேசி இணைப்புக்கு வழியில்லாமல் இருந்தது.அதுவும் நான் தினமும் பயணிக்கக்கூடிய ரயில் நிலையத்துக்கு மிதிவண்டியில் போனால் கூட 20 நிமிடங்கள் கும் போல உள்ளடங்கியிருந்தது.இங்கும் சிகரெட் வாசம்.வேண்டாம் என்றேன்.

அடுத்து மீண்டும் காதீப் பக்கம்.இது தமிழ் மக்கள் இருக்கும் வீடு.அறை சுமாராக இருந்தது.Warrope,படுக்கை இருந்தது.குளிர்சாதன வசதி கொடுக்கப்பட்டிருந்தது.சமையல் அறையில் உள்ள Tiles எப்போது விழுவது என்று நல்லகாலம் பார்த்துக்கொண்டிருந்தது.அறையில் தொலைபேசி இணைப்பு இல்லாததால் அதை போட்டுக்கொள்ள அனுமதித்தார்கள்.வாடகை 400 வெள்ளி என்றும் சமைத்தால் மேலும் 50 வெள்ளி கொடுக்கவேண்டும் என்றார்கள்.அகலக்கட்டை இணைய இணைப்பு இருக்கிறது என்றும்,அவர்கள் கணினியில் ஏதோ பிராப்ளம் என்பதால் நாங்கள் உபயோகித்தால் அதற்கு பணம் முழுவதுமாக கட்டவேண்டும் என்றார்கள்.வீட்டின் நிலைமை மற்றும் வாடகைக்கட்டணம் மிக அதிகமாக இருந்ததால் இதையும் நிராகரித்தேன்.

பீட்டரின் நாலாவது வீடு,இது நான் அப்போது இருந்த வீட்டுக்கு வெகு அருகாமையில் இருந்தது.இந்திய குடும்பம்- கணவன்,மனைவி ஒரு 5 வயது குழந்தை மற்றும் பணிப்பெண்.வாசலில் ஒரு கிளி- பார்த்தவுடன் நம் கால்கரி சிவாவின் பதிவு ஞாபகம் வந்தது.

இந்த வீட்டின் வசதிகள் போறுமானதாக இருந்தது.தொலை பேசி இணைப்பு இல்லை என்பதால் நான் அவர்கள் இணைய இணைப்பை பகிர்ந்துகொள்ள முடியுமா என்று கேட்டேன்.வரும் பில்லில் சம்மாக பகிர்ந்துகொள்ளலாம் என்றார்.அரை மனதுடன் சரி என்றேன்.
என்னுடைய கணினியில் wireless dongle இல்லாததால் எப்படி இணையத்துடன் இணைவது என்ற குழப்பம் வந்தது.பிறகு விசாரித்துக்கொள்ளலாம் என்றிருந்தேன்.

சமைக்க அனுமதி கிடைத்தது.இவருக்கு போன வாடகைதாரருடன் என்ன பிரச்சனையோ இவர் வீட்டில் உபயோகிக்கும் Piped Gas உபயோகம் பற்றியே அதிகம் கவலைப்பட்டார்.

30 வெள்ளிக்கு நான் உபயோகித்த சிலிண்டர் எனக்கு 7 மாதம் வரும்,அந்த அளவு தான் என்னுடைய பயண்பாடு என்று சொன்ன பிறகும் அவர் சமாதனம் அடையவில்லை. இவர் போட்ட சில கண்டீஷன்கள்.

வீட்டிற்கு உள்ளே வரும் போது காலை கழுவவேண்டும்.(ஆதாவது காலை கழுவாமல் ஹால் வழியாக சமையல் அறையில் நுழைந்து அங்குள்ள குளியல் அறையில் காலை கழுவிவிட்டு எனது அறைக்கு போகவேண்டும்).எனக்கென்ன தண்ணீர் செலவு அவுங்க தானே.

பிரதி செவ்வாய் கிழமை சாம்பிரானி போடுவோம்.அதனால் வீடு புகையாக இருக்கும்.

வாரத்துக்கு ஒரு முறை தான் வாஷிங் மிசின் போடவேண்டும்.

குளிக்க வெண்ணீர் போடலாம்,குளித்தபின் அணைத்துவிடவேண்டும்.

எல்லாம் பேசி முடித்த பிறகு,சரி நாளை என் முடிவை சொல்கிறேன் என்றேன்.

வாங்க அடுத்த வீட்டுக்கு.

No comments: