கடந்த ஒரு வருடகாலமாக கட்டுமானத்துறையில் நடைபெறும் பல நிகழ்வுகளை பார்த்து மனம் வெம்பும் அரை சதம் அடித்திருக்கும் பலரில் நானும் ஒருவன்.இதெல்லம் எல்லா பழசும் புலம்புவது போல் என்று இளைஞர்களுக்கு தோன்றினாலும் நாம் வாழும் வீடும் மற்றும் பல வித கட்டுமானங்களில் இருக்கும் குறைபாடுகள் நினைத்தாலும் மாற்ற முடியாத அளவுக்கு போய்விட்டது.இதற்கான மூல காரணத்தை ஆராய்ந்தால் விடை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு சிக்கலாக இருக்கும்.
இன்று இணையத்தில் வந்த ஒரு குழுமத்தில் வந்த கருத்து தான் உண்மை நிலவரத்துக்கு அருகில் உள்ளது.இது எல்லா நிறுவனங்களில் இருக்கிறது என்று சொல்லமுடியாது, பெரும்பான்மை நிறுவனங்கள் இப்படித்தான் தொழிலை நடத்துகிறது.
Dear Vikramjeet:
I totally agree that notes and detailed view do not help.
We have solved this problem to an extent. Whenever we give bar bending schedule for the Construction drawing, we include the complete lengths and shapes of bars (include section lengths) and calculate the steel quantity (length & weight) to the contractor accordingly only in the Schedule. Though it is more work on our part, but we do not leave it to them as to what length they need to put for the bars and where. With this the menace of non-conformance to drawing has reduced drastically, since the drawing communicates clearly to the “skilled labour” what needs to be done rather than they apply their own mind on it.
Regards,
Mehta,
Technologies
Dear Friends
Even if you do the entire BBS with all cut lengths, lap lengths, bend lengths etc. if the same is not implemented in site everything will go in vain. The construction industry is the most neglected part of the engineering industry. Until “ CHALTA HAI”, “ HOTA HAI”, “ WE HAVE DONE THIS EARLIER AND TILL DATE NOTHING HAS HAPPENED” these callus approaches are eradicated from the construction industry, the designer has to weep at the corner of the wall.
May GOD have mercy on him
Regard
Munsi
புகழ்பெற்ற கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்பவர்.
இனிமேல் வீடு/அலுவலகத்துகுள் நுழையும் முன் தைரியமாக இருக்கமுடியும்??
Friday, October 28, 2011
Tuesday, October 11, 2011
GK மூப்பனார் மேம்பாலம்
நந்தனம் சிக்னலில் இருந்து தேவர் சிலையை ஒட்டிய சாலையில் போனால் முதலில் வரும் சந்திப்பின் மேல் போகும் மேம்பாலம் தான் G.K.மூப்பனார் மேம்பாலம்.மறந்து போகாமல் இருக்க அவருடைய படத்தையும் போட்டிருந்ததாக ஞாபகம்.
இன்று சுமார் 11.45 க்கு நண்பரின் வேண்டுகோளுக்காக அங்கு போயிருந்தேன். பக்கத்தில் இருந்த கார் ஷோரூம் அவர் தன்னுடைய வேலையை பார்த்துக்கொண்டிருக்க என்னுடைய பார்வை அந்த மேம்பாலம் பக்கம் போனது.
இந்த படத்தை பாருங்கள்
வெள்ளை அம்புக்குறியிட்ட இடத்தில் ஒரு சிறிய இடைவெளி தெரிகிறதா? இது எதற்கு என்றால் மேம்பாலத்தில் வண்டி போகும் போதோ அல்லது சீதோஷ்ண நிலை மாறுபடும் போது ஏற்படும் நீள வேறுபாடுகள் சாலையை பாதிக்காமல் இருக்க கொடுக்கப்படும்.இதே முறை தான் ரயில் தண்டவாளங்களிலும் இருக்கும்.இதை சரியாக செய்த நெடுஞ்சாலைத்துறை அந்த பீம் மேல் கட்டியிருக்கும் சுவருக்கு அந்த இடைவெளி கொடுக்காமல் விட்டுவிட்டது.இதனால் கீழே உள்ள பீம் இடையே உள்ள இடைவெளி அர்த்தமற்று போய்விட்டது. அந்த இடைவெளி அர்த்தமற்று போய்விட்டதால் அந்த பீம் உட்கார்ந்து இருக்கும் Bearing ஒரு தெண்டச்செலவு. இதே மாதிரி பல அரசாங்க கட்டுமானமே முன்மாதிரி இல்லாதது கவலையளிக்கிறது.இத்துறையில் இருப்பவர்கள் இவற்றையெல்லாம் தெரிந்தே அனுமதிக்கிறார்களா? அல்லது வேறு எதுவும் காரணமா? பொறியாளர்களுக்கு தெரியாது என்று சொல்லமுடியவில்லை ஏனென்றால் மேம்பாலத்தில் மறுபக்கத்தில் உள்ள இந்த படத்தை பாருங்கள்.இந்த இடைவெளி எப்படி இருக்கவேண்டும் என்பதை அதை சரியாக கடைபிடித்திருப்பதையும் சொல்கிறது.
இன்று சுமார் 11.45 க்கு நண்பரின் வேண்டுகோளுக்காக அங்கு போயிருந்தேன். பக்கத்தில் இருந்த கார் ஷோரூம் அவர் தன்னுடைய வேலையை பார்த்துக்கொண்டிருக்க என்னுடைய பார்வை அந்த மேம்பாலம் பக்கம் போனது.
இந்த படத்தை பாருங்கள்
வெள்ளை அம்புக்குறியிட்ட இடத்தில் ஒரு சிறிய இடைவெளி தெரிகிறதா? இது எதற்கு என்றால் மேம்பாலத்தில் வண்டி போகும் போதோ அல்லது சீதோஷ்ண நிலை மாறுபடும் போது ஏற்படும் நீள வேறுபாடுகள் சாலையை பாதிக்காமல் இருக்க கொடுக்கப்படும்.இதே முறை தான் ரயில் தண்டவாளங்களிலும் இருக்கும்.இதை சரியாக செய்த நெடுஞ்சாலைத்துறை அந்த பீம் மேல் கட்டியிருக்கும் சுவருக்கு அந்த இடைவெளி கொடுக்காமல் விட்டுவிட்டது.இதனால் கீழே உள்ள பீம் இடையே உள்ள இடைவெளி அர்த்தமற்று போய்விட்டது. அந்த இடைவெளி அர்த்தமற்று போய்விட்டதால் அந்த பீம் உட்கார்ந்து இருக்கும் Bearing ஒரு தெண்டச்செலவு. இதே மாதிரி பல அரசாங்க கட்டுமானமே முன்மாதிரி இல்லாதது கவலையளிக்கிறது.இத்துறையில் இருப்பவர்கள் இவற்றையெல்லாம் தெரிந்தே அனுமதிக்கிறார்களா? அல்லது வேறு எதுவும் காரணமா? பொறியாளர்களுக்கு தெரியாது என்று சொல்லமுடியவில்லை ஏனென்றால் மேம்பாலத்தில் மறுபக்கத்தில் உள்ள இந்த படத்தை பாருங்கள்.இந்த இடைவெளி எப்படி இருக்கவேண்டும் என்பதை அதை சரியாக கடைபிடித்திருப்பதையும் சொல்கிறது.
Sunday, October 09, 2011
ஆனந்த தொல்லை
வேலை விஷயமாக சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானம் நடைபெரும் பகுதில் ஒன்றான வடபழனி - SRM பல்கலைகழகம் பக்கத்தில் நடந்து போய்கொண்டிருக்கும் போது இந்த குதிரை வண்டி கண்ணில் பட்டது.இந்த வண்டி இங்கு என்ன பண்ணுகிறது என்ற யோஜனையுடன் அடுத்த வரப்போகும் மூத்திர வாசனைக்காக என்னை தயார்படுத்திக்கொண்டேன்.சடாரென்று திரும்பி பார்க்கும் போது....
புறா
மிக மிக சீக்கிரமாக வளரக்கூடிய பறவை இனம் என்றால் மிகையில்லை. தற்காத்துக்கொள்ளக்கூடிய திறமை குறைவாக இருப்பதால் என்னவோ மிக சுலபமாக வேட்டையாடபடுகிறது.சிங்கையில் இருந்த போது இதன் எச்சம் மகிழுந்துகளிலும் கட்டிடங்களையும் பொலிவிழக்கச்செய்வதால் இதனை கட்டுப்படுத்த நஞ்சு கலந்த உணவு வைத்து சாகடித்தார்கள்.புறாவுக்கு மட்டுமில்லாமல் காக்கையும் சேர்த்தே இதன் முடிவு தான்.
சென்னையில் சுமார் 10 வருடங்களுக்கு முன்பு இந்த அளவுக்கு புறா கூட்டங்களை வீட்டுக்கு பக்கத்தில் பார்த்ததில்லை ஆனால் இப்போது இதன் அட்டகாசம் தாங்க முடியவில்லை.ஜன்னல் பக்கம் உட்கார்ந்துகொண்டு வீடு வெளிப்புறங்களை அசிங்கம் செய்துவிடுகிறது அதுவும் மழை பெய்தால் அதன் மூலம் வரும் நாற்றம் இன்னும் அதன் மீது வெறுப்பை வரவழைக்கிறது. சில வருடங்களுக்கு முன்பில் இருந்து எங்கள் வீட்டின் கழிவறை Exhaust Fan வைக்கும் இடம் வெற்றாக இருந்ததால் அதனுள் ஒரு புறா கூடு கட்டி வாழ்ந்து வந்தது.அப்போதிலிருந்து அது ஒரு பெரிய பிரச்சனையாக இல்லாத்தால் நாங்களும் கவலைப்படவில்லை. சமீபத்தில் அவைகளுக்கு ஏற்பட்ட இட பிரச்சனை அவர்களின் கழிவு வீட்டை நோக்கி வரவழைத்து மிக அதிகமாக நாற்றத்தை ஏற்படுத்தியது அதோடில்லாமல் ஜன்னல் குளிர்விப்பான மேல் சம தளமாக இருப்பதனால் அதன் மீதும் உட்கார்ந்து தன் தொழிலை தொடர்ந்தது.இது எல்லாவற்றையும் கட்டுப்படுத்த ஏதாவது வழி இருக்கா என்று நெட்டில் தேடிய போது மேற்கிந்திய நாடுகளில் கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து சொல்லியிருந்தார்கள்.அதெல்லாம் வேலைக்கு ஆகாது என்று வன்பொருள் கடைகளில் கேட்ட போது Wire Mesh ஐ காண்பித்து அதை வையுங்கள் புறா வராது என்றார்கள்.எனக்கு நம்பிக்கை இல்லாத்தால் வேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்தேன்.
சில நாட்கள் யோஜனையில் ஏதும் சரிப்பட்டு வரவில்லை.போன விடுமுறையில் மனைவி Loft மேல் இருக்கும் சில சாமான்களை எடுத்துகொடுக்ச்சொன்னார்கள் அப்போது ஒரு பெட்டியில் செயறகை அலங்கார பொருட்களை செய்ய உறுதுணையாக இருக்கும் ஒரு பொய் தங்க முலாம் பூசப்பட்ட ஒரு மெல்லிய கம்பியை பார்த்ததும் ஒரு ஐடியா தோனியது.புறாவை சாகாடிக்க கூடாது ஆனால் அது ஜன்னல் விளிம்பை உபயோகிக்க கூடாது. நான் செய்தது இது தான்.ஒரு பாலிஃபார்ம் எடுத்து அதன் ஒரு பகுதியில் இருந்து U வடிவில் அந்த மெல்லிய கம்பியை வெளிப்புறம் நோக்கியவாறு செலுத்த வேண்டும். இந்த பாலிஃபார்ம் ஜன்னலுடன் ஒட்ட வைக்க இருபுறமும் ஒட்டும் திறன் கொண்ட Tape மூலம் ஒட்டவைக்க வேண்டும்- அவ்வளவு தான். சுலபமாக புரிய கீழே உள்ளது படம். கடந்த 3 நாட்களாக புறா அங்கு வருவதில்லை.
சென்னையில் சுமார் 10 வருடங்களுக்கு முன்பு இந்த அளவுக்கு புறா கூட்டங்களை வீட்டுக்கு பக்கத்தில் பார்த்ததில்லை ஆனால் இப்போது இதன் அட்டகாசம் தாங்க முடியவில்லை.ஜன்னல் பக்கம் உட்கார்ந்துகொண்டு வீடு வெளிப்புறங்களை அசிங்கம் செய்துவிடுகிறது அதுவும் மழை பெய்தால் அதன் மூலம் வரும் நாற்றம் இன்னும் அதன் மீது வெறுப்பை வரவழைக்கிறது. சில வருடங்களுக்கு முன்பில் இருந்து எங்கள் வீட்டின் கழிவறை Exhaust Fan வைக்கும் இடம் வெற்றாக இருந்ததால் அதனுள் ஒரு புறா கூடு கட்டி வாழ்ந்து வந்தது.அப்போதிலிருந்து அது ஒரு பெரிய பிரச்சனையாக இல்லாத்தால் நாங்களும் கவலைப்படவில்லை. சமீபத்தில் அவைகளுக்கு ஏற்பட்ட இட பிரச்சனை அவர்களின் கழிவு வீட்டை நோக்கி வரவழைத்து மிக அதிகமாக நாற்றத்தை ஏற்படுத்தியது அதோடில்லாமல் ஜன்னல் குளிர்விப்பான மேல் சம தளமாக இருப்பதனால் அதன் மீதும் உட்கார்ந்து தன் தொழிலை தொடர்ந்தது.இது எல்லாவற்றையும் கட்டுப்படுத்த ஏதாவது வழி இருக்கா என்று நெட்டில் தேடிய போது மேற்கிந்திய நாடுகளில் கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து சொல்லியிருந்தார்கள்.அதெல்லாம் வேலைக்கு ஆகாது என்று வன்பொருள் கடைகளில் கேட்ட போது Wire Mesh ஐ காண்பித்து அதை வையுங்கள் புறா வராது என்றார்கள்.எனக்கு நம்பிக்கை இல்லாத்தால் வேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்தேன்.
சில நாட்கள் யோஜனையில் ஏதும் சரிப்பட்டு வரவில்லை.போன விடுமுறையில் மனைவி Loft மேல் இருக்கும் சில சாமான்களை எடுத்துகொடுக்ச்சொன்னார்கள் அப்போது ஒரு பெட்டியில் செயறகை அலங்கார பொருட்களை செய்ய உறுதுணையாக இருக்கும் ஒரு பொய் தங்க முலாம் பூசப்பட்ட ஒரு மெல்லிய கம்பியை பார்த்ததும் ஒரு ஐடியா தோனியது.புறாவை சாகாடிக்க கூடாது ஆனால் அது ஜன்னல் விளிம்பை உபயோகிக்க கூடாது. நான் செய்தது இது தான்.ஒரு பாலிஃபார்ம் எடுத்து அதன் ஒரு பகுதியில் இருந்து U வடிவில் அந்த மெல்லிய கம்பியை வெளிப்புறம் நோக்கியவாறு செலுத்த வேண்டும். இந்த பாலிஃபார்ம் ஜன்னலுடன் ஒட்ட வைக்க இருபுறமும் ஒட்டும் திறன் கொண்ட Tape மூலம் ஒட்டவைக்க வேண்டும்- அவ்வளவு தான். சுலபமாக புரிய கீழே உள்ளது படம். கடந்த 3 நாட்களாக புறா அங்கு வருவதில்லை.
Wednesday, August 10, 2011
மகிழுந்து
என்ன தான் போகும் வழிகளை பளிச் என்று காட்டியிருந்தாலும் “எதிர்” திசையில் தான் போவேன் என்று அடம்பிடித்த மஞ்சள் Top வாடகை மகிழுந்துகள் ஒதுக்கப்பட்டு காலத்தின் கட்டாயத்துக்கு ஏற்று ஓட்டத்தை நிறுத்த தயராக நிற்கின்றன.
சென்னை விமான நிலையத்தின் ஒரு ஓரமாக நிறுத்தப்பட்டுள்ள மகிழுந்துகள்.
அலை பேசியில் எடுத்ததால் அவ்வளவு சரியாக வரவில்லை.
Saturday, July 30, 2011
என்ன செய்கிறார்கள் இவர்கள்?
படத்தை பாருங்கள்...ஏதோ கான்கிரீட்டை உடைக்கிறார்கள் அவ்வளவு தான் என்று இத்துறையில் இல்லாதவர்களுக்கு தெரியும், ஆனால் இதனுள் பல ரகசியங்கள் ஒளிந்திருக்கு.

கட்டிடம் தாங்கும் திறனை அதிகரிக்க Pile எனப்படும் கான்கிரீட் தூண்களில் வரும் பலவகைகளில் இதுவும் ஒன்று. சில நாட்களுக்கு முன்பு Driven Pile என்னும் முறையைப்பற்றி சொல்லியிருந்தேன் அது போல் போடப்பட்டது தான் இது.இம்முறையில் போடும் போது சாதாரன நிலையில் இருக்கும் இடத்தின் மீது இவ்வியந்திரத்தை நிறுத்தி செய்வார்கள். வேலை முடிந்ததும் தேவையான அளவுக்கு இந்த Pile ஐ உடைத்துவிட்டு அஸ்திவாரத்துக்கு தேவையான கம்பி கட்டி கான்கிரீட் போடுவார்கள்.
தேவையான் அளவுக்கு உடைத்து...இந்த வேலை தான் மேல் உள்ள படத்தில் பார்க்கிறீர்கள்.இந்த வேலையில் இவர்கள் செய்வது துளிகூட பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்காமல் செய்துவருகிறார்கள்.அவர்களிடம் சிறிது நேரம் பேச்சுக்கொடுத்த போது...
ஏம்பா! இப்படி கண்ணுக்கு பாதுகாப்பு கண்ணாடி போட வேலை செய்கிறீர்கள்?
சார்,கண்ணாடி போடலாம் ஆனால் வேலை செய்யும் போது வியர்வை வழிந்து என் பார்வையை மறைக்கும் நான் உளி மீது அடிக்கவேண்டிய அடி தவறுதலாக கீழே உள்ளவர் மீது விழலாம். இது சம்மட்டி வைத்திருப்பவர் சொன்னது.
அப்படி என்றால் கீழே நிற்பவர் கண்ணாடி போடலாமே?
பதில் இல்லை.
கண் எவ்வளவு முக்கியமானது இவ்வளவு தூரத்தில் நிற்கும் நானே பல முறை யோசித்து தான் நிற்கிறேன் நீங்கள் இப்படி கவனம் இல்லாமல் வேலை செய்கிறீர்களே என்றேன்.
சார்,(இந்த சாரை எப்பத்தான் விட போகிறார்களோ!!) இதெல்லாம் எங்களுக்கும் புரிகிறது ஆனால் அதெல்லாம் வேலக்காகாது என்று முடித்துவிட்டு அவர்கள் வேலையை ஆரம்பித்தார்கள். தலைக்கவசம் போட வேண்டும் என்று தெரியும் ஆனால் இப்படி குனிந்து சம்மட்டி அடிக்கும் போது அது தலையில் இருந்து நழுவும் வாய்ப்பு உள்ளதால் எங்கள் நிலை தடுமாற வாய்ப்பு உள்ளது என்றார்கள்.
இந்த வேலையை பாதுகாப்பாக செய்ய பல முறைகள் இருந்தாலும் முழுமையாக மனித வளம் கொண்டு இவ்வேலையை செய்யும் போது இந்த மாதிரி பிரச்சனைகள் வரும்.குத்தகைகாரர்கள் இயந்திரங்களை வைத்து வேலைபார்பதற்கு ஆகும் செலவை கணக்கிட்டு மனித வளத்தை நாடுகிறார்கள் என்றே தோன்றுகிறது.
மேலே உள்ள படத்தை சொடுக்கி பெரிதாக்கி பார்த்தால் இவர்களின் தொழிற் திறமை தெரியும். முதலில் Pile ஐ சுற்றி இருக்கும் சுழற்கம்பியை எடுத்துவிட்டு பிறகு நேர் கம்பிகளை வெளியே எடுத்துவிட்டு எந்த இடத்தில் Pile ஐ உடைக்கவேண்டுமோ அங்கு சிறிது உடைத்துவிட்டு மேலே தட்டினால் கேக் மாதிரி விழுந்துவிடும்.
கட்டிடம் தாங்கும் திறனை அதிகரிக்க Pile எனப்படும் கான்கிரீட் தூண்களில் வரும் பலவகைகளில் இதுவும் ஒன்று. சில நாட்களுக்கு முன்பு Driven Pile என்னும் முறையைப்பற்றி சொல்லியிருந்தேன் அது போல் போடப்பட்டது தான் இது.இம்முறையில் போடும் போது சாதாரன நிலையில் இருக்கும் இடத்தின் மீது இவ்வியந்திரத்தை நிறுத்தி செய்வார்கள். வேலை முடிந்ததும் தேவையான அளவுக்கு இந்த Pile ஐ உடைத்துவிட்டு அஸ்திவாரத்துக்கு தேவையான கம்பி கட்டி கான்கிரீட் போடுவார்கள்.
தேவையான் அளவுக்கு உடைத்து...இந்த வேலை தான் மேல் உள்ள படத்தில் பார்க்கிறீர்கள்.இந்த வேலையில் இவர்கள் செய்வது துளிகூட பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்காமல் செய்துவருகிறார்கள்.அவர்களிடம் சிறிது நேரம் பேச்சுக்கொடுத்த போது...
ஏம்பா! இப்படி கண்ணுக்கு பாதுகாப்பு கண்ணாடி போட வேலை செய்கிறீர்கள்?
சார்,கண்ணாடி போடலாம் ஆனால் வேலை செய்யும் போது வியர்வை வழிந்து என் பார்வையை மறைக்கும் நான் உளி மீது அடிக்கவேண்டிய அடி தவறுதலாக கீழே உள்ளவர் மீது விழலாம். இது சம்மட்டி வைத்திருப்பவர் சொன்னது.
அப்படி என்றால் கீழே நிற்பவர் கண்ணாடி போடலாமே?
பதில் இல்லை.
கண் எவ்வளவு முக்கியமானது இவ்வளவு தூரத்தில் நிற்கும் நானே பல முறை யோசித்து தான் நிற்கிறேன் நீங்கள் இப்படி கவனம் இல்லாமல் வேலை செய்கிறீர்களே என்றேன்.
சார்,(இந்த சாரை எப்பத்தான் விட போகிறார்களோ!!) இதெல்லாம் எங்களுக்கும் புரிகிறது ஆனால் அதெல்லாம் வேலக்காகாது என்று முடித்துவிட்டு அவர்கள் வேலையை ஆரம்பித்தார்கள். தலைக்கவசம் போட வேண்டும் என்று தெரியும் ஆனால் இப்படி குனிந்து சம்மட்டி அடிக்கும் போது அது தலையில் இருந்து நழுவும் வாய்ப்பு உள்ளதால் எங்கள் நிலை தடுமாற வாய்ப்பு உள்ளது என்றார்கள்.
இந்த வேலையை பாதுகாப்பாக செய்ய பல முறைகள் இருந்தாலும் முழுமையாக மனித வளம் கொண்டு இவ்வேலையை செய்யும் போது இந்த மாதிரி பிரச்சனைகள் வரும்.குத்தகைகாரர்கள் இயந்திரங்களை வைத்து வேலைபார்பதற்கு ஆகும் செலவை கணக்கிட்டு மனித வளத்தை நாடுகிறார்கள் என்றே தோன்றுகிறது.
மேலே உள்ள படத்தை சொடுக்கி பெரிதாக்கி பார்த்தால் இவர்களின் தொழிற் திறமை தெரியும். முதலில் Pile ஐ சுற்றி இருக்கும் சுழற்கம்பியை எடுத்துவிட்டு பிறகு நேர் கம்பிகளை வெளியே எடுத்துவிட்டு எந்த இடத்தில் Pile ஐ உடைக்கவேண்டுமோ அங்கு சிறிது உடைத்துவிட்டு மேலே தட்டினால் கேக் மாதிரி விழுந்துவிடும்.
Sunday, June 19, 2011
கம்பிகளை இணைப்பது எப்படி?
கட்டுமானத்துறையில் கம்பிகளின் பயண்பாடு அதிகரித்த பிறகு ரொம்ப நாட்களுக்கு மிகச்சில முன்னேற்றங்களுடனே வந்துகொண்டிருந்தது அதில் மிக முக்கியமான முன்னேற்றம் என்னவென்றால் கப்லர் (இணைப்பான்) என்று சொல்லக்கூடிய முறையில் இணைப்பது.
இதற்கான தரக்கட்டுப்பாடு முறையை இங்கே சொல்லியிருந்தேன்.
கம்பிகளை இணைப்பது என்பது பழங்காலந்தொட்டு சிறிது வளைவுடன் கீழிருந்து வரும் கம்பியுடன் படத்தில் காட்டிய மாதிரி இணைப்பார்கள். இது எவ்வளவு நீளம் இருக்கவேண்டும் என்ற நியதிகள் இருக்கு அதனுள் சென்று விளக்கம் அளிப்பது என்பது உங்களை இன்னும் சோகத்தில் ஆழ்த்தும் என்பதால் அதிலிருந்து எஸ் ஆகிவிடலாம்.

இதற்கடுத்து சில இடங்களில் இணைக்கும் கம்பிகளை வெல்டிங் முறையை உபயோகித்து சேர்ப்பார்கள். இம்முறை தேவை ஏற்பட்டால் மட்டுமே செய்வார்கள்.
இம்முறையில் மேலும் முன்னேறிய முறை என்றால் இந்த கப்லர் முறை. முதலில் உபயோகப்படுத்த வேண்டிய கம்பியின் இரு முனையிலும் Threading இருக்கவேண்டும் அதற்கு பிறகு தரம்வாய்ந்த கப்லர் மூலம் கம்பிகளை இணைக்க வேண்டும் அவ்வளவு தான்.இதனால் என்ன பயன்கள்? சில கீழே
1.கம்பிகளை வளைத்து தான் உபயோகப்படுத்த வேண்டும் என்ற நியதி இல்லை.
2.ஆட்களுக்கு கொஞ்சம் சுலபமான வேலை.
3.Lap Length என்று சொல்லப்படுகிற கம்பி நீளம் மிச்சம்.
4. வேலை ஆரம்பிக்கும் முன்பே இக்கம்பிகளை தயார் செய்து வைக்க முடியும் என்பதால் நேர மிச்சம்.
5.கம்பி கட்டும் நேரம் கொஞ்சம் குறையும்.
6.கம்பிகளை நீளத்துக்கு தகுந்த மாதிரி உபயோகிப்பதால் Wastage குறைய வாய்ப்புள்ளது.
பயன்கள் என்றால் அதற்கு எதிர்மறை விளைவுகளும் இருக்கத்தானே செய்யும் அவற்றில் சில
1.Coupler இன் விலை
2.கம்பிகளின் முனையை Thread செய்ய ஆகும் செலவு.
3.சில ரக கம்பிகளில் Thread செய்ய முடியாததால் அக்கம்பிகளை நிராகரிக்க வேண்டிவரும்.Wastage செலவு.
இதெல்லாம் ஆய்வு செய்து பலன் கூட இருக்கும் முறையை கடைபிடிப்பார்கள்.
ரோஸ் கலரில் குப்பி இருக்கும் இடத்தில் தான் கப்லர் இணைக்கப்பட்டு மேற்கம்பி பொருத்தப்படும்.

மேற்சொன்ன முறையை மேம்படுத்தும் விதமாக Threading இல்லாமல் கம்பியில் இருக்கும் Rib ஐ கொண்டே கப்லரை இணைக்கும் முறை வந்துள்ளது அது இன்னும் இங்கு பரவலாக காணப்படுவதில்லை.இம்முறை பரவலாக்கப்பட்டால் நேரமும் பணமும் மிச்சமாகலாம்.
இதற்கான தரக்கட்டுப்பாடு முறையை இங்கே சொல்லியிருந்தேன்.
கம்பிகளை இணைப்பது என்பது பழங்காலந்தொட்டு சிறிது வளைவுடன் கீழிருந்து வரும் கம்பியுடன் படத்தில் காட்டிய மாதிரி இணைப்பார்கள். இது எவ்வளவு நீளம் இருக்கவேண்டும் என்ற நியதிகள் இருக்கு அதனுள் சென்று விளக்கம் அளிப்பது என்பது உங்களை இன்னும் சோகத்தில் ஆழ்த்தும் என்பதால் அதிலிருந்து எஸ் ஆகிவிடலாம்.
இதற்கடுத்து சில இடங்களில் இணைக்கும் கம்பிகளை வெல்டிங் முறையை உபயோகித்து சேர்ப்பார்கள். இம்முறை தேவை ஏற்பட்டால் மட்டுமே செய்வார்கள்.
இம்முறையில் மேலும் முன்னேறிய முறை என்றால் இந்த கப்லர் முறை. முதலில் உபயோகப்படுத்த வேண்டிய கம்பியின் இரு முனையிலும் Threading இருக்கவேண்டும் அதற்கு பிறகு தரம்வாய்ந்த கப்லர் மூலம் கம்பிகளை இணைக்க வேண்டும் அவ்வளவு தான்.இதனால் என்ன பயன்கள்? சில கீழே
1.கம்பிகளை வளைத்து தான் உபயோகப்படுத்த வேண்டும் என்ற நியதி இல்லை.
2.ஆட்களுக்கு கொஞ்சம் சுலபமான வேலை.
3.Lap Length என்று சொல்லப்படுகிற கம்பி நீளம் மிச்சம்.
4. வேலை ஆரம்பிக்கும் முன்பே இக்கம்பிகளை தயார் செய்து வைக்க முடியும் என்பதால் நேர மிச்சம்.
5.கம்பி கட்டும் நேரம் கொஞ்சம் குறையும்.
6.கம்பிகளை நீளத்துக்கு தகுந்த மாதிரி உபயோகிப்பதால் Wastage குறைய வாய்ப்புள்ளது.
பயன்கள் என்றால் அதற்கு எதிர்மறை விளைவுகளும் இருக்கத்தானே செய்யும் அவற்றில் சில
1.Coupler இன் விலை
2.கம்பிகளின் முனையை Thread செய்ய ஆகும் செலவு.
3.சில ரக கம்பிகளில் Thread செய்ய முடியாததால் அக்கம்பிகளை நிராகரிக்க வேண்டிவரும்.Wastage செலவு.
இதெல்லாம் ஆய்வு செய்து பலன் கூட இருக்கும் முறையை கடைபிடிப்பார்கள்.
Sunday, May 29, 2011
இதுவும் ஒரு வகை
எச்சரிக்கை:இது தொழிற்சார் பதிவு.
கட்டிடத்தின் தாங்கும் சக்தியை அதிகரிக்க பெரிய பெரிய கட்டிடங்களுக்கு மண்ணுக்கு கீழே தாங்கும் தூண்களை இறக்குவார்கள். எடைக்கு ஏற்ற மாதிரி பலவித அளவுகளில் இந்த தூண்கள் இருக்கும்.இதை மேலும் அலசாமல் சமீபத்தில் நான் பார்த்த ஒரு வித்தியாசமான தூண் கட்டுமானத்தை பார்க்கலாம். தூண் தூண் என்று சொல்லும் போதெல்லாம் சப்ஜெக்ட் தெரிந்தவர்கள் Pile என்று அர்த்தம் செய்துகொள்ளுங்கள்.

மொத்தமே 5 பேர் தான்.நெகிழான மண் உள்ள இடம் மற்றும் அளவான தூரம் மண்ணுக்கு கீழே இருக்குமானால் இம்முறை சரியாக வரும். மேலே உள்ள படத்தில் 350 மி மீட்டர் விட்டம் உள்ள தூண்,மண்ணுக்கு கீழே 5 மீட்டர் மட்டுமே போகக்கூடிய தூண் அமைக்கும் வேலையை செய்கிறார்கள்.இது அனேகமாக சுற்றுச்சுவர் கட்டுவதற்கான அஸ்திவாரத்தின் ஒரு பகுதியாக இருக்கக்கூடும்.
மண்ணில் துளை போடும் போதே உள்ளே இருக்கும் மண்ணை எடுக்கும் விதத்தில் அமைந்துள்ள துருத்தியை செக்க்கு மாடு போல் 4 ஆட்கள் சுற்றுவார்கள்.அனுபவத்தில் சில சுற்றுகள் முடிந்த்த பிறகு அது சேகரிந்த மண்ணை வின்ஞ் மூலம் தூக்கி மண்ணை வெளியில் கொட்டுவார்கள்.இதே மாதிரி தேவையான ஆழத்துக்கு மண்ணை தோண்டிவிட்டு கம்பி போட்டு கான்கிரீட் போட்டுவிடுவார்கள்.

எவ்வளவோ தொழிற்நுட்பம் வளர்ந்த நிலையில் இம்மாதிரி மனித உழைப்பை நம்பி செய்யும் வேலையும் அவ்வப்போதும் நடந்துவருகிறது,இதுவே ஒரு சில இடங்களில் Economical ஆகவும் இருக்கக்கூடும்.
கட்டிடத்தின் தாங்கும் சக்தியை அதிகரிக்க பெரிய பெரிய கட்டிடங்களுக்கு மண்ணுக்கு கீழே தாங்கும் தூண்களை இறக்குவார்கள். எடைக்கு ஏற்ற மாதிரி பலவித அளவுகளில் இந்த தூண்கள் இருக்கும்.இதை மேலும் அலசாமல் சமீபத்தில் நான் பார்த்த ஒரு வித்தியாசமான தூண் கட்டுமானத்தை பார்க்கலாம். தூண் தூண் என்று சொல்லும் போதெல்லாம் சப்ஜெக்ட் தெரிந்தவர்கள் Pile என்று அர்த்தம் செய்துகொள்ளுங்கள்.
மொத்தமே 5 பேர் தான்.நெகிழான மண் உள்ள இடம் மற்றும் அளவான தூரம் மண்ணுக்கு கீழே இருக்குமானால் இம்முறை சரியாக வரும். மேலே உள்ள படத்தில் 350 மி மீட்டர் விட்டம் உள்ள தூண்,மண்ணுக்கு கீழே 5 மீட்டர் மட்டுமே போகக்கூடிய தூண் அமைக்கும் வேலையை செய்கிறார்கள்.இது அனேகமாக சுற்றுச்சுவர் கட்டுவதற்கான அஸ்திவாரத்தின் ஒரு பகுதியாக இருக்கக்கூடும்.
மண்ணில் துளை போடும் போதே உள்ளே இருக்கும் மண்ணை எடுக்கும் விதத்தில் அமைந்துள்ள துருத்தியை செக்க்கு மாடு போல் 4 ஆட்கள் சுற்றுவார்கள்.அனுபவத்தில் சில சுற்றுகள் முடிந்த்த பிறகு அது சேகரிந்த மண்ணை வின்ஞ் மூலம் தூக்கி மண்ணை வெளியில் கொட்டுவார்கள்.இதே மாதிரி தேவையான ஆழத்துக்கு மண்ணை தோண்டிவிட்டு கம்பி போட்டு கான்கிரீட் போட்டுவிடுவார்கள்.
எவ்வளவோ தொழிற்நுட்பம் வளர்ந்த நிலையில் இம்மாதிரி மனித உழைப்பை நம்பி செய்யும் வேலையும் அவ்வப்போதும் நடந்துவருகிறது,இதுவே ஒரு சில இடங்களில் Economical ஆகவும் இருக்கக்கூடும்.
Saturday, May 28, 2011
உத்திரமேரூர்
அவ்வப்போது செங்கல்பட்டை தாண்டி செல்லும் போது இவ்வூர் தகவல் பலகை கண்ணில் பட்டாலும் அங்கு இருக்கும் கோவில்கள் மற்றும் பொக்கீழியிங்களை பற்றி அவ்வளவாக தெரிந்திருந்து வைத்திருக்கவில்லை. அவ்வப்போது நடக்கும் பதிவர் சந்திப்பில் கலந்துகொள்ளும் ஒருவர் அங்கு நடக்கும் புனரமைப்பை சொன்ன போது என்றாவது ஒரு நாள் போய் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் உண்டானது.ஆயிரம் வருடங்களுக்கு மேலான தொண்மையான வழக்கங்களை (குடையோலை) கற்களில் செதுக்கி வைத்துள்ளார்கள். பழந்தமிழை படிக்கமுடிந்தவர்களுக்கு அருமையான விருந்து.
மாமண்டூரை தாண்டியதும் வலது பக்கத்தில் போக ஒரு அறிவிப்பு பலகை இருக்கும்,அவ்வழியே போனால் உத்திரமேரூரை அடையலாம்.


சரியான அறிவிப்பு பலகை இல்லாததால் பேருந்து நிலையத்துக்கு பக்கத்திலேயே இவ்விடம் இருந்தாலும் மகிழுந்து ஓட்டும் போது சாலையிலேயே கவனம் இருப்பதாலும் கவனிக்க முடியாமல் நேரே இருக்கும் சுந்தர வரதராஜ கோவிலுக்கு போய் அருகில் இருக்கும் இடத்தில் மகிழுந்துவை நிறுத்திவிட்டு பக்கத்தில் இருப்பட்வர்களை கேட்டு இந்த கோவிலுக்கு வந்தோம்.சிறிய கோவில் சுற்றி உள்ள கற்களில் எல்லாம் பழந்தமிழ் எழுத்துக்கள் அங்கங்கே தெலுங்கு எழுத்துக்களையும் காணமுடிந்தது.பழைய தமிழுக்கு இக்கால தமிழ் மொழியாக்கத்தை வாசலில் போட்டிருக்கும் பலகையில் போட்டிருந்தார்கள். நாங்கள் போன நேரம் இளம் மாலை என்பதால் கூட்டம் அதிகமில்லை.


பழைய தமிழை எவ்வளவு நேரம் பார்த்துக்கொண்டிருப்பது? அங்கிருந்து பக்கத்தில் இருக்கும் சுந்தரவதனராஜ கோவிலுக்கு போனோம்.இக்கோவிலை பார்த்து தான் பெஸன்ட் நகரில் இருக்கும் அஸ்டலக்ஷ்மி கோவிலை கட்டினார்களாம்.எப்போதோ ஒரு முறை அஸ்டலக்ஷ்மி கோவிலுக்கு போயிருந்ததால் அதையும் இதையும் ஒப்பிட்டு பார்க்கமுடியவில்லை.

கோவிலின் உள்ளே நுழைவாயிலுக்கு பக்கத்தில் உள்ள மண்டபம் மட்டுக்கொட்டகையாக பயண்படுத்திவருகிறார்கள்.எப்போது இடிந்து விழுமோ என்ற நிலையிலேயே உள்ளது.

ஊருக்குள் நடக்கும் ஞாயிறு சந்தை.

கோபுர அழகு.
மாமண்டூரை தாண்டியதும் வலது பக்கத்தில் போக ஒரு அறிவிப்பு பலகை இருக்கும்,அவ்வழியே போனால் உத்திரமேரூரை அடையலாம்.
சரியான அறிவிப்பு பலகை இல்லாததால் பேருந்து நிலையத்துக்கு பக்கத்திலேயே இவ்விடம் இருந்தாலும் மகிழுந்து ஓட்டும் போது சாலையிலேயே கவனம் இருப்பதாலும் கவனிக்க முடியாமல் நேரே இருக்கும் சுந்தர வரதராஜ கோவிலுக்கு போய் அருகில் இருக்கும் இடத்தில் மகிழுந்துவை நிறுத்திவிட்டு பக்கத்தில் இருப்பட்வர்களை கேட்டு இந்த கோவிலுக்கு வந்தோம்.சிறிய கோவில் சுற்றி உள்ள கற்களில் எல்லாம் பழந்தமிழ் எழுத்துக்கள் அங்கங்கே தெலுங்கு எழுத்துக்களையும் காணமுடிந்தது.பழைய தமிழுக்கு இக்கால தமிழ் மொழியாக்கத்தை வாசலில் போட்டிருக்கும் பலகையில் போட்டிருந்தார்கள். நாங்கள் போன நேரம் இளம் மாலை என்பதால் கூட்டம் அதிகமில்லை.
பழைய தமிழை எவ்வளவு நேரம் பார்த்துக்கொண்டிருப்பது? அங்கிருந்து பக்கத்தில் இருக்கும் சுந்தரவதனராஜ கோவிலுக்கு போனோம்.இக்கோவிலை பார்த்து தான் பெஸன்ட் நகரில் இருக்கும் அஸ்டலக்ஷ்மி கோவிலை கட்டினார்களாம்.எப்போதோ ஒரு முறை அஸ்டலக்ஷ்மி கோவிலுக்கு போயிருந்ததால் அதையும் இதையும் ஒப்பிட்டு பார்க்கமுடியவில்லை.
கோவிலின் உள்ளே நுழைவாயிலுக்கு பக்கத்தில் உள்ள மண்டபம் மட்டுக்கொட்டகையாக பயண்படுத்திவருகிறார்கள்.எப்போது இடிந்து விழுமோ என்ற நிலையிலேயே உள்ளது.
ஊருக்குள் நடக்கும் ஞாயிறு சந்தை.
கோபுர அழகு.
Monday, May 16, 2011
மாமல்லபுரம்.
ஒரு சில வாரங்களாகவே மகிழுந்துவில் நெடுந்தூரம் செல்லாமல் இருந்ததை நிவர்த்தி செய்யும் விதமாக காலையில் முடிவு செய்து மதியம் 2.50க்கு வீட்டை விட்டு கிளம்பி மத்திய கைலாஸ் வழியாக சென்று கிழக்கு கடற்கரை சாலை மூலம் மாமல்லபுரம் போனோம்.சுமார் 1.45 மணி நேரம் ஆனது.மிக மோசமான சாலை என்று சொல்ல முடியாவிட்டாலும் அபாயகரமான சாலை என்றே சொல்லலாம்.இம்முறையில் இரண்டு முறை மாடுகளை இடிக்கப்பார்த்தேன் நல்ல வேளை தப்பித்தேன். சாலை தடுப்பு என்ற முறையில் அங்கங்கே கம்பி போர்ட்டுகளை வைத்திருப்பது வேகத்தை கட்டுப்படுத்தினாலும் ஒருபக்க வாகனங்களை மற்றொரு பக்க வாகனம் கவனித்து வழிவிட்டாலொழிய அவ்விடமும் விபத்து ஏற்படுதக்கூடிய நிலையிலேயே தான் உள்ளது.
பின்காலை பொழுதிலேயே சிறிதாக தலைவலி ஆரம்பித்திருந்தாலும் வெளியில் போனால் சரியாகிவிடும் என்று நினைத்ததற்கு நேர் எதிராக சதிராட்டம் போட்டது.சிற்பங்களை அனுபவித்து பார்க்கவிடாமல் கவனத்தை சிதரடித்தது.நாங்கள் பார்த்த சில படங்கள் உங்களுக்காக...







கடற்கரை கோவிலை பார்ப்பதற்கு முன்பு குளிர் ஜூரம் வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டதாலும் ஒரு வழிச்சாலை என்று திருப்பித்திருப்பி ஒரே சாலையில் பயணித்த வெறுப்பும் கூடியதால் அதை பார்க்கமாலேயே வெளியேறினோம்.
வண்டியில் எனக்கு குளிர மனைவிக்கு வேர்க்க மாற்றி மாற்றி குளிர்விப்பானை போட்டு கிண்டி வந்த நேரத்தில் தொண்டை வரை எட்டிப்பார்த்துக்கொண்டிருந்த வாந்தி பக்கென்று வெளியே வந்தது.அவசரமாக வண்டியை ஓரம்கட்டி பார்க்கிங் விளக்கை போட்டுவிட்டு வெளியே ஓடி தலையை பிடித்து கொஞ்சம் கொட்டிவிட்டு மறுபடி வண்டியை எடுத்து வீட்டுக்கு வந்தோம்.
பின்காலை பொழுதிலேயே சிறிதாக தலைவலி ஆரம்பித்திருந்தாலும் வெளியில் போனால் சரியாகிவிடும் என்று நினைத்ததற்கு நேர் எதிராக சதிராட்டம் போட்டது.சிற்பங்களை அனுபவித்து பார்க்கவிடாமல் கவனத்தை சிதரடித்தது.நாங்கள் பார்த்த சில படங்கள் உங்களுக்காக...
கடற்கரை கோவிலை பார்ப்பதற்கு முன்பு குளிர் ஜூரம் வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டதாலும் ஒரு வழிச்சாலை என்று திருப்பித்திருப்பி ஒரே சாலையில் பயணித்த வெறுப்பும் கூடியதால் அதை பார்க்கமாலேயே வெளியேறினோம்.
வண்டியில் எனக்கு குளிர மனைவிக்கு வேர்க்க மாற்றி மாற்றி குளிர்விப்பானை போட்டு கிண்டி வந்த நேரத்தில் தொண்டை வரை எட்டிப்பார்த்துக்கொண்டிருந்த வாந்தி பக்கென்று வெளியே வந்தது.அவசரமாக வண்டியை ஓரம்கட்டி பார்க்கிங் விளக்கை போட்டுவிட்டு வெளியே ஓடி தலையை பிடித்து கொஞ்சம் கொட்டிவிட்டு மறுபடி வண்டியை எடுத்து வீட்டுக்கு வந்தோம்.
Friday, March 04, 2011
காளஹஸ்தி
இரண்டு மாதங்களாக அம்மிணிக்கு காளஹஸ்தி ஜுரம் ஆனாலும் தள்ளிப்போய்கொண்டே இருந்தது. போன வாரம் ஞாயிறு எல்லாம் சரியான திசையில் போய்கொண்டிந்ததால் காலை 10.30 க்கு கிளம்பலாம் என்று முடிவு செய்துகொண்டோம் அதற்கு முன்னால் எப்படி போகனும் என்று கூகிள் மூலம் தெரிந்துகொண்டேன்.
விருகம்பாக்கம்---->கோயம்பேடு----->புழல்------>கல்கட்டா நெடுஞ்சாலை---->தடா------> காளஹஸ்தி
என்ன தான் நெடுஞ்சாலை என்றாலும் பல உள்ளூர்கள் குறுக்கிடுவதால் பல இடங்களில் வேகம் எடுக்கமுடியவில்லை.தடா வரை அவ்வளவு பிரச்சனையில்லை. தடாவில் இருந்து காளஹஸ்தி வரை உள்ள சாலையில் நிறைய வேகத்தடைகள் உள்ளன. நெடுஞ்சாலையில் ஓட்டிய பிறகு இங்குள்ள அறிவுப்புகளை பார்க்கனும் என்றே தோன்றுவதில்லை.111 கி.மீட்டர் தூரத்தை 2.15 மணி நேரத்தில் போனேன்.ஊருக்கு உள்ளே தெலுங்கில் பெரும்பாலான அறிவுப்புகள் இருப்பதால் என்னவோ கோவில் இருக்கும் இடத்தை கேட்டுக்கேட்டு போகவேண்டியுள்ளது.ஓரளவு விஸ்தாராமான கோவில், சிறப்புக்கட்டணம்/சாதாரண கட்டணங்கள் மக்களை இறை அருள் கிடைக்கும் நேரத்தில் கொண்டுவிடுகிறது.கோவில் உள்ளேயே ஏற்படுத்தி இருக்கும் நடைபாதைகள் மிகவும் குறுகலாகவும் நடக்கமுடியாத முதியவர்களுக்கு ஏற்றதாகவும் இல்லை.வரும் காலத்தில் யாரோ நெருக்கடியில் உயிர்விட சாத்தியம் அதிகமாக உள்ளது.வெளியேரும் வழியும் குறிப்பில்லாமல் இருக்கிறது.ஜனத்தொகை மிக அதிகமாகிவிட்ட இக்காலத்தில் கோவிலுக்கு போவது என்பது இரண்டாம்பட்சமாகவே இருக்கிறது.
அங்கு எடுத்த சில படங்கள் கீழே.
கல்கி ஆஸ்ரமாம்!!




கோபுர தரிசனம்.

சரவண பவன் என்ற ஹோட்டல் இருந்தாலும் சுவை ஏதோ மாதிரி இருந்தது பசிக்கு ஓகே.
விருகம்பாக்கம்---->கோயம்பேடு----->புழல்------>கல்கட்டா நெடுஞ்சாலை---->தடா------> காளஹஸ்தி
என்ன தான் நெடுஞ்சாலை என்றாலும் பல உள்ளூர்கள் குறுக்கிடுவதால் பல இடங்களில் வேகம் எடுக்கமுடியவில்லை.தடா வரை அவ்வளவு பிரச்சனையில்லை. தடாவில் இருந்து காளஹஸ்தி வரை உள்ள சாலையில் நிறைய வேகத்தடைகள் உள்ளன. நெடுஞ்சாலையில் ஓட்டிய பிறகு இங்குள்ள அறிவுப்புகளை பார்க்கனும் என்றே தோன்றுவதில்லை.111 கி.மீட்டர் தூரத்தை 2.15 மணி நேரத்தில் போனேன்.ஊருக்கு உள்ளே தெலுங்கில் பெரும்பாலான அறிவுப்புகள் இருப்பதால் என்னவோ கோவில் இருக்கும் இடத்தை கேட்டுக்கேட்டு போகவேண்டியுள்ளது.ஓரளவு விஸ்தாராமான கோவில், சிறப்புக்கட்டணம்/சாதாரண கட்டணங்கள் மக்களை இறை அருள் கிடைக்கும் நேரத்தில் கொண்டுவிடுகிறது.கோவில் உள்ளேயே ஏற்படுத்தி இருக்கும் நடைபாதைகள் மிகவும் குறுகலாகவும் நடக்கமுடியாத முதியவர்களுக்கு ஏற்றதாகவும் இல்லை.வரும் காலத்தில் யாரோ நெருக்கடியில் உயிர்விட சாத்தியம் அதிகமாக உள்ளது.வெளியேரும் வழியும் குறிப்பில்லாமல் இருக்கிறது.ஜனத்தொகை மிக அதிகமாகிவிட்ட இக்காலத்தில் கோவிலுக்கு போவது என்பது இரண்டாம்பட்சமாகவே இருக்கிறது.
அங்கு எடுத்த சில படங்கள் கீழே.
கல்கி ஆஸ்ரமாம்!!
கோபுர தரிசனம்.
சரவண பவன் என்ற ஹோட்டல் இருந்தாலும் சுவை ஏதோ மாதிரி இருந்தது பசிக்கு ஓகே.
Friday, February 18, 2011
Exercise- உடல் நலம்.
என்னுடைய முந்தைய பதிவுகளில் அவ்வப்போது உடல் நலம் பேணுவதின் அவசியத்தை பற்றி எழுதியிருக்கேன் ஆனால் இதுவரை இணையத்தில் விடாத படங்களை இப்போது விடுகிறேன்.
தூசியை பார்த்தாலே தும்மல் விடும் நான் அந்த ஒவ்வாமை மூலமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு வார சிகிச்சைக்கு பிறகு வெளியில் வந்தேன், இது நடந்ததெல்லாம் 1982 வாக்கில்.மருத்துவ மனையில் இருக்கும் போது அங்கிருந்த மருத்துவர் சொன்ன அறிவுரை தான் இன்றுவரை என்னுடைய உடல்நலத்தை பாதுகாக்கவும் பேணுவதற்கும் உதவி வருகிறது.
அன்று இருந்த இடம் பொட்டை காடு “ஜிம்” என்ற வார்த்தைக்கு அர்த்தம் கூட தெரியாத வயது இப்படி இருக்கும் கால கட்டத்தில் எனக்கு கிடைத்த ஒரே வழி Parallel Bar. இரு பைப்புகள் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் பொருத்தப்படும் அதன் மூலம் செய்யும் Exercise நமது தசைகளை முறுக்கேற்றி நெஞ்சேற்றி நடக்கவைக்கும், மீசை முருக்கும் அளவுக்கு இருந்தால் அதன் மூலம் கொஞ்ச பந்தா காட்டவும் உதவும்.
விடாமுயற்சியும் ஓரளவு சத்துள்ள சாப்பாடு சாப்பிட்டு தினமும் செய்தால் உடலை நோய் எதிர்ப்பு சக்திக்கு ஏதுவாக இருக்கும் படி செய்யலாம். சுமார் 1 1/2 ஆண்டு காலம் விடாமல் செய்தது எந்த ஊருக்கு போனாலும் அது இருக்கும் இடம் தேடி செய்யவைத்தது.
சிங்கையில் மூலைக்கு ஒன்றாக இருக்கும் பூங்காவில் இளைஞர்களுக்கு மற்றும் முதியவர்களுக்கு ஏற்ற Exercise சாதனத்தை இலவசமாக வைத்திருப்பார்கள்.தினமும் அலுவலகம் விட்டு வந்தபிறகு சுமார் 2 கி.மீ நடந்த பிறகு கீழே உள்ள மாதிரி செய்வேன்.


துபாய் போன பிறகு ஜிம் உள்ளே இருக்கும் சாதனங்களை ஓரிரு முறை உபயோகித்துள்ளேன்.

வெளிநாட்டு வேலைகளை மூட்டைகட்டிய பிறகு சென்னை வந்தவுடன் இந்த Parallel Bar க்காக தேடித்தேடி அலைந்து ஓய்ந்து போன வேளையில் ஒரு நாள் திநகர் வெங்கட்நாராயண சாலையில் உள்ள நடேசன் பூங்காவில் இதைக் கண்டேன் ஆசையில் சில நாட்கள் செய்த பிறகு வயதான மூட்டுகள் வாய்விட்டு அலராமல் வலி மூலம் தன் இயலாமை காட்டியது.எச்சரிக்கை மணி அடித்த பிறகும் வீம்புக்காக செய்யாமல் வேறு விதமான Exercise களை செய்துவருகிறேன்.
தூசியை பார்த்தாலே தும்மல் விடும் நான் அந்த ஒவ்வாமை மூலமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு வார சிகிச்சைக்கு பிறகு வெளியில் வந்தேன், இது நடந்ததெல்லாம் 1982 வாக்கில்.மருத்துவ மனையில் இருக்கும் போது அங்கிருந்த மருத்துவர் சொன்ன அறிவுரை தான் இன்றுவரை என்னுடைய உடல்நலத்தை பாதுகாக்கவும் பேணுவதற்கும் உதவி வருகிறது.
அன்று இருந்த இடம் பொட்டை காடு “ஜிம்” என்ற வார்த்தைக்கு அர்த்தம் கூட தெரியாத வயது இப்படி இருக்கும் கால கட்டத்தில் எனக்கு கிடைத்த ஒரே வழி Parallel Bar. இரு பைப்புகள் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் பொருத்தப்படும் அதன் மூலம் செய்யும் Exercise நமது தசைகளை முறுக்கேற்றி நெஞ்சேற்றி நடக்கவைக்கும், மீசை முருக்கும் அளவுக்கு இருந்தால் அதன் மூலம் கொஞ்ச பந்தா காட்டவும் உதவும்.
விடாமுயற்சியும் ஓரளவு சத்துள்ள சாப்பாடு சாப்பிட்டு தினமும் செய்தால் உடலை நோய் எதிர்ப்பு சக்திக்கு ஏதுவாக இருக்கும் படி செய்யலாம். சுமார் 1 1/2 ஆண்டு காலம் விடாமல் செய்தது எந்த ஊருக்கு போனாலும் அது இருக்கும் இடம் தேடி செய்யவைத்தது.
சிங்கையில் மூலைக்கு ஒன்றாக இருக்கும் பூங்காவில் இளைஞர்களுக்கு மற்றும் முதியவர்களுக்கு ஏற்ற Exercise சாதனத்தை இலவசமாக வைத்திருப்பார்கள்.தினமும் அலுவலகம் விட்டு வந்தபிறகு சுமார் 2 கி.மீ நடந்த பிறகு கீழே உள்ள மாதிரி செய்வேன்.
துபாய் போன பிறகு ஜிம் உள்ளே இருக்கும் சாதனங்களை ஓரிரு முறை உபயோகித்துள்ளேன்.
வெளிநாட்டு வேலைகளை மூட்டைகட்டிய பிறகு சென்னை வந்தவுடன் இந்த Parallel Bar க்காக தேடித்தேடி அலைந்து ஓய்ந்து போன வேளையில் ஒரு நாள் திநகர் வெங்கட்நாராயண சாலையில் உள்ள நடேசன் பூங்காவில் இதைக் கண்டேன் ஆசையில் சில நாட்கள் செய்த பிறகு வயதான மூட்டுகள் வாய்விட்டு அலராமல் வலி மூலம் தன் இயலாமை காட்டியது.எச்சரிக்கை மணி அடித்த பிறகும் வீம்புக்காக செய்யாமல் வேறு விதமான Exercise களை செய்துவருகிறேன்.
Friday, February 11, 2011
பேருந்து நாள்!!
வயசுப்பையனாக நான் இருந்த போதே இந்த கூத்தை கேட்டிருந்தாலும் நேரிடையாக பார்த்ததில்லை அதை சில நாட்களுக்கு முன்பு நாளைய தலைவர்களை உருவாக்கும் ஒரு கல்லூரி மாணவர்கள் அவர்கள் கல்லூரி முன் செய்த அட்டகாசத்தை பார்க்கவும்.
ஒரு பேருந்தை கடத்தி அதனை அவர்கள் கல்லூரிக்குள் எடுத்துச்செல்வது போல் இருந்தது.


அன்று அண்ணா சாலையில் போக்குவரத்தை ஸ்தம்பிக்கவைத்ததோடு மட்டுமில்லாமல் வருங்கால சந்ததிக்கு ஒரு மோசமான நிகழ்வை நிகழ்த்திக்காட்டி விட்டிருந்தார்கள்.
என்ன பொது அறிவு!!! படம் கீழே.
ஒரு பேருந்தை கடத்தி அதனை அவர்கள் கல்லூரிக்குள் எடுத்துச்செல்வது போல் இருந்தது.
அன்று அண்ணா சாலையில் போக்குவரத்தை ஸ்தம்பிக்கவைத்ததோடு மட்டுமில்லாமல் வருங்கால சந்ததிக்கு ஒரு மோசமான நிகழ்வை நிகழ்த்திக்காட்டி விட்டிருந்தார்கள்.
என்ன பொது அறிவு!!! படம் கீழே.
Wednesday, February 09, 2011
எப்போது ஓடும்?
கோயம்பேடுவில் இருந்து பில்லர் மற்றும் சைதாப்பேட்டையில் இருந்து கிண்டி போகும் வாகனங்களுக்கு இந்த தற்காலிக தொல்லையில் இருந்து தப்பிக்க இப்போது வழியில்லை,அதாங்க இந்த மெட்ரோ வேலையினால் இருந்த 3 வழிப்பாதை இரண்டாகி எந்த வண்டி எதன் மேல் உரசும்,மோதும் என்ற பயத்துடன் தினமும் பயணிக்கவேண்டியுள்ளது.கொஞ்ச நாட்களுக்கு முன்பு விடியற்காலை இவ்விடங்களுக்கு போய் அவர் மூலம் போக்குவரத்து பாதிக்காமல் பார்த்துக்கொண்டுள்ளார் நம் துணை முதல்வர், மேலும் 2013 யில் மெட்ரோ பயணிக்க ஆரம்பித்துவிடும் என்று சொல்லியிருக்கார் அதற்கேற்ப்ப வேலைகளும் மிக ஜரூராக நடந்துகொண்டிருக்கு.கோயம்பேடு மற்றும் வடபழனி பகுதிகளில் வேலை வேகமாக நடந்துவருகிறது.

அந்த மேம்பாலத்தின் மேற்பகுதி இப்போதைக்கு இப்படி இருக்கும்.நடுவில் இருக்கும் கம்பி இருக்கும் பகுதியில் தான் ரயில் ஓடும்,அத்தோடு இருபக்கமும் கைப்பிடி சுவர் மாதிரி கான்கிரீட் சுவர்கள் வரும் அதனுள் தேவையான மின்சார கேபிள்கள் போக வழி உண்டாக்கப்படும்.

ஒரு பில்லரில் இருந்து மறுபில்லர்கள் வரை உள்ள கான்கிரீட் துண்டுகளால் ஆனது அதை தகுந்த கெமிக்கல் மூலம் ஒட்டவைத்து பிறகு அவ்வளவு துண்டுகளையும் ஒருங்கினைத்து “Post Tensioning" முறைப்படி இழுத்துவைத்துவிடுவார்கள்.
மேலும் மேலும் அவ்வப்போது நடக்கும் சிறப்பு நிகழ்வுகளை படம் கிடைத்தால் போடுகிறேன்.
அந்த மேம்பாலத்தின் மேற்பகுதி இப்போதைக்கு இப்படி இருக்கும்.நடுவில் இருக்கும் கம்பி இருக்கும் பகுதியில் தான் ரயில் ஓடும்,அத்தோடு இருபக்கமும் கைப்பிடி சுவர் மாதிரி கான்கிரீட் சுவர்கள் வரும் அதனுள் தேவையான மின்சார கேபிள்கள் போக வழி உண்டாக்கப்படும்.
ஒரு பில்லரில் இருந்து மறுபில்லர்கள் வரை உள்ள கான்கிரீட் துண்டுகளால் ஆனது அதை தகுந்த கெமிக்கல் மூலம் ஒட்டவைத்து பிறகு அவ்வளவு துண்டுகளையும் ஒருங்கினைத்து “Post Tensioning" முறைப்படி இழுத்துவைத்துவிடுவார்கள்.
மேலும் மேலும் அவ்வப்போது நடக்கும் சிறப்பு நிகழ்வுகளை படம் கிடைத்தால் போடுகிறேன்.
Thursday, February 03, 2011
Pre-Cast Girder
இத்தொழிற்நுட்பம் பற்றி பல இடங்களில் எழுதியிருந்தாலும் சமீபத்தில் சென்ற ஒரு வேலை இடத்தில் எடுத்த படம் கிடைத்தது.அதன் விபரம் மற்றும் அனுகூலங்கள் கீழே.

இதை தரையில் மிகப்பெரிய முன்னேற்பாடுகள் இல்லாமல் குறைவான செலவில் கால தாமதமின்றி தேவைக்காலத்துக்கு முன்பே செய்துவிடலாம்.இத்துடன் அதன் தொடர்புடைய மற்றொரு தொழிற்நுட்பமான போஸ்ட் டென்ஷன் (Post Tension) ஐ புகுத்தி நம் தேவைக்கு ஏற்ப பீம்களை கான்கிரீட் போடலாம்.மேலே உள்ள படத்தில் கீழே உள்ள இரண்டு கான்கிரீட் குமிழ்கள் ஏற்கனவே அவ்விடத்தில் உள்ள கேபிள்களை இழுப்பு விசைக்கொண்டு நிலை நிறுத்தி அதன் பிரத்யோக அமைப்பின் மூலம் Lock செய்தவுடன் அதனை இம்மாதிரி கான்கிரீட் கொண்டு பூசிவிடுவார்கள்.இப்படி செய்யவேண்டும் என்ற அவசியம் இல்லை என்றாலும் ஏதாவது ஒரு காரணத்தில் அந்த கம்பிகள் லூஸ் ஆனால் அதை பிடித்திருக்கும் நட் மாதிரியான அமைப்பு புல்லட் மாதிரி வெளியேற வாய்புள்ளது.அந்த வாய்ப்பை தவிர்க்கவே இந்த மாதிரி கான்கிரீட் போட்டு மூடிவிடுவார்கள்.

மேலே உள்ள படத்தில் கீழிருந்து 3 வது ஓட்டையில் ஒரு நெகிழி வைத்திருக்கார்களே அது இந்த பீம் கான்கிரீட் போடும் போது வளைந்து போகாமல் தடுக்க அதன் உள் அளவுக்கு தகுந்த நெகிழியை வைத்துவிடுவார்கள்.இந்த கேபிள் போகும் பாதை மெலிதான் தகடு பைப் ஒன்று இந்த முனையில் இருந்த அடுத்த முனை வரை போகக்கூடியதாக இருக்கும்.
கீழே உள்ள இரு பைப்புகளில் உள்ள ஒயர்களை Strands என்று சொல்வார்கள் இதன் மூலம் தேவையான இழுப்புவிசையை ஏற்படுத்தி கான்கிரீட் பீமை தகுந்த Load தாங்கக்கூடிய நிலைக்கு எடுத்துவருவார்கள்.மேலே உள்ள இரண்டு ஓட்டைகளையும் இதே முறையில் நிலை நிறுத்துவார்கள் அது இப்பீமை கிரேன் மூலம் தேவையான இடத்தில் வைத்த பிறகு செய்வார்கள்.இம்முறை இடத்துக்கு இடம் மாறுபடும் என்பதால் இது தான் முழுவேலை என்று சொல்லமுடியாது.

மேலே உள்ள படத்தில் ஒரு சிறிய Shutter ஐ எடுக்க எவ்வளவு பேர் நிற்கிறார்கள் பாருங்கள்.என்ன தான் அளவில் சிறியதாக இருந்தாலும் கான்கிரீட்டில் இருந்து வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் கம்பிகளால் இவ்வேலை நிறைய நேரம் எடுக்கும்.இப்படிப்பட்ட பல அனுகூலங்கள் இருந்தாலும் இப்படிப்பட்ட கஷ்டங்களும் இருக்கும்.

இதை தரையில் மிகப்பெரிய முன்னேற்பாடுகள் இல்லாமல் குறைவான செலவில் கால தாமதமின்றி தேவைக்காலத்துக்கு முன்பே செய்துவிடலாம்.இத்துடன் அதன் தொடர்புடைய மற்றொரு தொழிற்நுட்பமான போஸ்ட் டென்ஷன் (Post Tension) ஐ புகுத்தி நம் தேவைக்கு ஏற்ப பீம்களை கான்கிரீட் போடலாம்.மேலே உள்ள படத்தில் கீழே உள்ள இரண்டு கான்கிரீட் குமிழ்கள் ஏற்கனவே அவ்விடத்தில் உள்ள கேபிள்களை இழுப்பு விசைக்கொண்டு நிலை நிறுத்தி அதன் பிரத்யோக அமைப்பின் மூலம் Lock செய்தவுடன் அதனை இம்மாதிரி கான்கிரீட் கொண்டு பூசிவிடுவார்கள்.இப்படி செய்யவேண்டும் என்ற அவசியம் இல்லை என்றாலும் ஏதாவது ஒரு காரணத்தில் அந்த கம்பிகள் லூஸ் ஆனால் அதை பிடித்திருக்கும் நட் மாதிரியான அமைப்பு புல்லட் மாதிரி வெளியேற வாய்புள்ளது.அந்த வாய்ப்பை தவிர்க்கவே இந்த மாதிரி கான்கிரீட் போட்டு மூடிவிடுவார்கள்.

மேலே உள்ள படத்தில் கீழிருந்து 3 வது ஓட்டையில் ஒரு நெகிழி வைத்திருக்கார்களே அது இந்த பீம் கான்கிரீட் போடும் போது வளைந்து போகாமல் தடுக்க அதன் உள் அளவுக்கு தகுந்த நெகிழியை வைத்துவிடுவார்கள்.இந்த கேபிள் போகும் பாதை மெலிதான் தகடு பைப் ஒன்று இந்த முனையில் இருந்த அடுத்த முனை வரை போகக்கூடியதாக இருக்கும்.
கீழே உள்ள இரு பைப்புகளில் உள்ள ஒயர்களை Strands என்று சொல்வார்கள் இதன் மூலம் தேவையான இழுப்புவிசையை ஏற்படுத்தி கான்கிரீட் பீமை தகுந்த Load தாங்கக்கூடிய நிலைக்கு எடுத்துவருவார்கள்.மேலே உள்ள இரண்டு ஓட்டைகளையும் இதே முறையில் நிலை நிறுத்துவார்கள் அது இப்பீமை கிரேன் மூலம் தேவையான இடத்தில் வைத்த பிறகு செய்வார்கள்.இம்முறை இடத்துக்கு இடம் மாறுபடும் என்பதால் இது தான் முழுவேலை என்று சொல்லமுடியாது.
மேலே உள்ள படத்தில் ஒரு சிறிய Shutter ஐ எடுக்க எவ்வளவு பேர் நிற்கிறார்கள் பாருங்கள்.என்ன தான் அளவில் சிறியதாக இருந்தாலும் கான்கிரீட்டில் இருந்து வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் கம்பிகளால் இவ்வேலை நிறைய நேரம் எடுக்கும்.இப்படிப்பட்ட பல அனுகூலங்கள் இருந்தாலும் இப்படிப்பட்ட கஷ்டங்களும் இருக்கும்.
Sunday, January 30, 2011
சோலிங்கர்
ஜனவரி 26 - குடியரசு தினம் மிக முக்கியமாக அது விடுமுறை நாள்.இந்தியா வந்த பிறகு இந்த சனிக்கிழமை வேலை பல காரியங்களை அலுவலக நேரத்திலேயே பார்க்கவேண்டிய கட்டாயத்துக்கும் அதோடு ஞாயிறு நாளை மிகவும் திட்டமிடவேண்டிய நிலமைக்கு தள்ளுகிறது.இச்சூழ்நிலையில் தேர்ந்தடுத்தது தான் சோலிங்கர் பயணம்.
முதல் நாள் இரவே கூகிளில் தேடிய போது அரகோணம் போய் அங்கிருந்து போவது தான் சுலபம் என்று போட்டிருந்தார்கள்.என்னுடைய புரிதல் படி திருப்பதி திருப்பத்தில் போய் அதன் வழியே அரக்கோணம் போவது தான் சரி என்ற நிலையில் இருந்தேன்.மகிழுந்து வாங்கி என்னுடைய நெடுஞ்சாலை பயணத்தை முதலில் காஞ்சிபுரம் போய் தயார்படுத்திக்கொண்ட பிறகு இது இரண்டாவது பயணம்.
கோயம்பேடு வழியாக “அண்ணா நகர்” என்று போட்டிருக்கும் திருப்பத்தில் திரும்பினால் பெங்களூர் நெடுஞ்சாலை வரும்.நம்மூர் சாலை வழிகாட்டிகள் ஆட்டோ ஓட்டுனரும் சாலை ஓரத்தில் நிற்கும் மனிதர்கள் தான்.இந்த அண்ணா நகர் திருப்பத்தில் பெங்களூர் நெடுஞ்சாலை என்று போட்டிருந்தால் எவ்வளவு சௌகரியமாக இருந்திருக்கும்!! முதல் கொடுமையை விட்டுத்தள்ளிவிட்டு திருப்பதி சாலையை நோக்கி பயணித்தோம்,ஓரளவு முன்பே தெரிந்திருந்தாலும் திருப்பதி சாலை திருப்பத்தை காண்பிக்கும் அறிவிப்பு பலகையில் பாதியை காணோம், “திருப்” மட்டுமே இருந்தது.ஏற்கனவே திருத்தணி போயிருந்த மணைவி இவ்வழியை காட்டிலும் காஞ்சிபூரம் தாண்டி வலது கை பக்கம் திரும்பினால் இன்னும் சுலபமாக இருக்கும் என்றார்,உடனே வழியை மாற்றி ஸ்ரீபெரும்புதூர் நோக்கி வண்டியைவிட்டேன்.பாதிவழி போகும் போது அவருக்கும் சந்தேகம் வர அங்கு சாலை ஓரம் நிற்பவர்களிடம் வழி கேட்டோம். வருகிற வலது திருப்பத்தில் திரும்பி மறுபடி வரும் சாலையில் இடது பக்கம் திரும்பி போனால் அரக்கோணம் சாலை வரும் என்றார்கள். மோசமான சாலை 40 கி.மீட்டருக்கு மேல் போகவிடாமல் செய்தது.வந்த ஒரே பெரிய ஊர் சாலை ஓர டிக்கடையில் டீ சாப்பிட்ட படியே கடை முதலாளியிடம் பேச்சு கொடுத்தோம்.எங்களுக்கு சரியான வழியை சொல்லிவிட்டு திரும்ப வரும் போது பானாவரம் மற்றும் காவேரிபட்டினம் வழியாக வந்தால் நெடுஞ்சாலை வந்துவிட்டும் என்றார். மனதில் குறித்துக்கொண்டேன்.
காலை 7 மணிக்கு வீட்டை விட்டு கிளம்பி 9.50 க்கு சோலிங்கர் வந்து சேர்ந்தோம்.பெரிய மலை யில் இருக்கும் நரசிம்மர் மற்றும் சின்ன மலையில் இருக்கும் ஆஞ்சநேயர் சுவாமிகளை தரிசித்தோம்.1305 + 400 படிகளை ஏறி இறங்கினோம்.மொத்தம் 2.30 மணி நேரம் ஆனது.


கீழே உள்ள கோவிலை ஏன் பராமரிக்காமல் விட்டுவிட்டார்கள் என்று தெரியவில்லை.

கையில் கொண்டு போன சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு மதியம் 1 மணிக்கு கிளம்பினோம்.வழியை விஜாரித்துக்கொண்டு பானாவரம் மற்றும் காவேரிப்பட்டினம் வழியாக நெடுஞ்சாலைக்கு 1.30 மணிக்கு வந்தோம்,அருமையான சாலை அவ்வளவு போக்கு வரத்தும் இல்லை.நெடுஞ்சாலை பிடித்த பிறகு 80 ~ 90 என்று வந்து வீட்டுக்குள் வரும் போது 3.15 PM.என்ன தான் நெடுஞ்சாலை என்றாலும் சாலை ஓரத்தில் நிற்கும் இந்த கண்டெய்னர் லாரிகள் ஒருவித சிக்னலும் கொடுக்காமல் சாலைக்குள் வந்து விபத்துகளை ஏற்படுத்துகிறார்கள் அப்படி ஒரு நிகழ்வு எனக்கும் ஏற்பட்டது நல்ல வேளையாக சரியான நேரத்தில் பிரேக் போட்டு சமாளித்தேன்.
போகும் போது 99 கிமீ ஆனது வரும் போது 115 கிமீட்டர் ஆனது.
எல்லை பிரச்சனை

கைபையை சோதனை போடும் குரங்கு
முதல் நாள் இரவே கூகிளில் தேடிய போது அரகோணம் போய் அங்கிருந்து போவது தான் சுலபம் என்று போட்டிருந்தார்கள்.என்னுடைய புரிதல் படி திருப்பதி திருப்பத்தில் போய் அதன் வழியே அரக்கோணம் போவது தான் சரி என்ற நிலையில் இருந்தேன்.மகிழுந்து வாங்கி என்னுடைய நெடுஞ்சாலை பயணத்தை முதலில் காஞ்சிபுரம் போய் தயார்படுத்திக்கொண்ட பிறகு இது இரண்டாவது பயணம்.
கோயம்பேடு வழியாக “அண்ணா நகர்” என்று போட்டிருக்கும் திருப்பத்தில் திரும்பினால் பெங்களூர் நெடுஞ்சாலை வரும்.நம்மூர் சாலை வழிகாட்டிகள் ஆட்டோ ஓட்டுனரும் சாலை ஓரத்தில் நிற்கும் மனிதர்கள் தான்.இந்த அண்ணா நகர் திருப்பத்தில் பெங்களூர் நெடுஞ்சாலை என்று போட்டிருந்தால் எவ்வளவு சௌகரியமாக இருந்திருக்கும்!! முதல் கொடுமையை விட்டுத்தள்ளிவிட்டு திருப்பதி சாலையை நோக்கி பயணித்தோம்,ஓரளவு முன்பே தெரிந்திருந்தாலும் திருப்பதி சாலை திருப்பத்தை காண்பிக்கும் அறிவிப்பு பலகையில் பாதியை காணோம், “திருப்” மட்டுமே இருந்தது.ஏற்கனவே திருத்தணி போயிருந்த மணைவி இவ்வழியை காட்டிலும் காஞ்சிபூரம் தாண்டி வலது கை பக்கம் திரும்பினால் இன்னும் சுலபமாக இருக்கும் என்றார்,உடனே வழியை மாற்றி ஸ்ரீபெரும்புதூர் நோக்கி வண்டியைவிட்டேன்.பாதிவழி போகும் போது அவருக்கும் சந்தேகம் வர அங்கு சாலை ஓரம் நிற்பவர்களிடம் வழி கேட்டோம். வருகிற வலது திருப்பத்தில் திரும்பி மறுபடி வரும் சாலையில் இடது பக்கம் திரும்பி போனால் அரக்கோணம் சாலை வரும் என்றார்கள். மோசமான சாலை 40 கி.மீட்டருக்கு மேல் போகவிடாமல் செய்தது.வந்த ஒரே பெரிய ஊர் சாலை ஓர டிக்கடையில் டீ சாப்பிட்ட படியே கடை முதலாளியிடம் பேச்சு கொடுத்தோம்.எங்களுக்கு சரியான வழியை சொல்லிவிட்டு திரும்ப வரும் போது பானாவரம் மற்றும் காவேரிபட்டினம் வழியாக வந்தால் நெடுஞ்சாலை வந்துவிட்டும் என்றார். மனதில் குறித்துக்கொண்டேன்.
காலை 7 மணிக்கு வீட்டை விட்டு கிளம்பி 9.50 க்கு சோலிங்கர் வந்து சேர்ந்தோம்.பெரிய மலை யில் இருக்கும் நரசிம்மர் மற்றும் சின்ன மலையில் இருக்கும் ஆஞ்சநேயர் சுவாமிகளை தரிசித்தோம்.1305 + 400 படிகளை ஏறி இறங்கினோம்.மொத்தம் 2.30 மணி நேரம் ஆனது.
கீழே உள்ள கோவிலை ஏன் பராமரிக்காமல் விட்டுவிட்டார்கள் என்று தெரியவில்லை.
கையில் கொண்டு போன சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு மதியம் 1 மணிக்கு கிளம்பினோம்.வழியை விஜாரித்துக்கொண்டு பானாவரம் மற்றும் காவேரிப்பட்டினம் வழியாக நெடுஞ்சாலைக்கு 1.30 மணிக்கு வந்தோம்,அருமையான சாலை அவ்வளவு போக்கு வரத்தும் இல்லை.நெடுஞ்சாலை பிடித்த பிறகு 80 ~ 90 என்று வந்து வீட்டுக்குள் வரும் போது 3.15 PM.என்ன தான் நெடுஞ்சாலை என்றாலும் சாலை ஓரத்தில் நிற்கும் இந்த கண்டெய்னர் லாரிகள் ஒருவித சிக்னலும் கொடுக்காமல் சாலைக்குள் வந்து விபத்துகளை ஏற்படுத்துகிறார்கள் அப்படி ஒரு நிகழ்வு எனக்கும் ஏற்பட்டது நல்ல வேளையாக சரியான நேரத்தில் பிரேக் போட்டு சமாளித்தேன்.
போகும் போது 99 கிமீ ஆனது வரும் போது 115 கிமீட்டர் ஆனது.
எல்லை பிரச்சனை
கைபையை சோதனை போடும் குரங்கு
Subscribe to:
Posts (Atom)