கிழே உள்ள படம் சிங்கை நூலக வெளிப்புற கண்ணாடி சுவரை சுத்தம் செய்யும் போது எடுத்தது.இரு கயிற்றில் ஒன்று பாதுகாப்புக்காக.

கிழே உள்ள படம் துபாயில் ஒரு கட்டிடத்தில் அதே வேலை பழைய முறையில் நடக்கிறது.சில பாதுகாப்பு குறைபாடுங்கள் உள்ளன்.தலைக்கவசம் அணியவில்லை.

கடைசியாக நேற்று சென்னையில் எடுத்தது.இன்ஷூரன்ஸ் கம்பெனி விளம்பரம் வேறு.இதில் உள்ள குறைபாடுகள்...
முதலில் கட்டிடம் இவ்வேலை செய்ய தகுந்த ஏற்பாடுகளை கொண்டிருக்கவில்லை,அப்படியே இருந்தாலும் ஏன் அதை உபயோகிக்கவில்லை? இந்த நூலேனி சமாச்சாரம் எல்லாம் சர்கஸ் மற்றும் கப்பலில் மட்டுமே மிஞ்சியுள்ளது.அந்த ஏணியில் உள்ளவர் பாதுகாப்பு பட்டை அணியவில்லை.தலைக்கவசமும் இல்லை.ஆக மொத்தத்தில் இங்கு மனித உயிர்கள் "மிக மலிவு விலையில்!!"

நாளுக்கு நாள் பாதுகாப்பு சமாச்சாரங்கள் நுட்பமான முறையில் உலக நாடுகளில் அறிமுகபடுத்திவரும் வேலையில் நாம்மட்டும் ஏன் இவ்வளவு வருடங்கள் எடுத்துக்கொள்கிறோம் என்பது புரியாத புதிராகவே இருக்கு.
2 comments:
//நாளுக்கு நாள் பாதுகாப்பு சமாச்சாரங்கள் நுட்பமான முறையில் உலக நாடுகளில் அறிமுகபடுத்திவரும் வேலையில் நாம்மட்டும் ///
ரெம்ப கஷ்டம் தான்...
வாங்க நாடோடி
நம்மிடையை எங்கோ ஏதோ மிக சிக்கலாக இருக்கு,இல்லாவிட்டால் கூவம் சீரமைக்க சிங்கை போகும் நம் தலைவர்கள் மற்றதை கண்டுக்கமாட்டார்களா என்ன?
Post a Comment