மற்றவைகளை படங்கள் பேசட்டும்.
Friday, January 15, 2010
Qurm பூங்கா
வீட்டுக்கு அருகில் இருக்கும் பூங்கா- ரோஸ் கார்டன் என்று செல்லமாக அழைக்கப்படுகிறது.எப்போது போனாலும் மத்திய பகுதியில் ஏரி மாதிரி இருக்கும் இடத்தை சுற்றி முடிந்ததும் கொஞ்சம் இளைப்பாறி விட்டு வந்துவிடுவேன்.போன வாரம் போன போது எப்போது போகும் வழியை விட்டுவிட்டு வெளிப்பக்கம் போகலாம் என்று நினைத்து வழி மாறினேன்.உள்ளழகு ஒரு விதம் என்றால் வெளியழகு வேறு விதம்.பல இடங்களில் புல் வெளிகள் மனதை கொள்ளைகொள்கின்றன.அப்படியே மேலும் கொஞ்ச தூரம் நடந்தால் செயற்கையாக ஒரு அரண் அமைத்து அதிலிருந்து நீர் வீழ்ச்சி மாதிரி அமைத்துள்ளார்கள்.கீழே விழும் தண்ணீரில் பெருமளவு நுரை காணப்பட்டது ஏனென்று தெரியவில்லை.இப்போது கொஞ்சம் குளிர் இருப்பதால் அதற்கேற்றவாறு பல மலர்களை வைத்து மேலும் அழகூட்டியுள்ளார்கள்.
மற்றவைகளை படங்கள் பேசட்டும்.


மற்றவைகளை படங்கள் பேசட்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment